பிரியாத வரம் வேண்டும் (தொலைக்காட்சித் தொடர்)
பிரியாத வரம் வேண்டும் என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் 17 சூன் 2019 முதல் 1 ஆகத்து 2020 வரை திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பான கனவுருப்புனைவு காதல் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இந்தத் தொடரில் விமல் வெங்கடேசன், பிரியங்கா, மதுமிதா போன்றவர்கள் நடித்திருந்தனர்.[2] இத்தொடர் கொரோனா தொற்றுநோய் காரணமாக 1 ஆகத்து 2020 அன்று 203 அத்தியாயங்களுடன் முடிவடைந்தது. [3] கதைச்சுருக்கம்முன் ஜென்மத்தில் காதலிக்கும் ரிஷி மற்றும் துர்கா. இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து துர்காவை ரிஷியின் குடும்பத்தினர் கொலை செய்கிறார். கதாநாயகனும் கொல்லப்படுகிறான். 300 வருடம் கழித்து மறுபடியும் சந்திக்கும் காதல் ஜோடிகள். இந்த ஜென்மத்திலும் இவர்களின் காதலுக்கு எதிராக இருக்கும் குடும்பம். தடைகளை தாண்டி முன் ஜென்மத்தில் கதாநாயகனை கொலை செய்தது யார்? இந்த ஜென்மத்தில் இவர்கள் எப்படி ஒன்று சேரப்போகின்றார்கள் என்பது தான் கதை. நடிகர்கள்முதன்மை கதாபாத்திரம்
துணை கதாபாத்திரம்
நடிகர்களின் தேர்வுஇந்தத் தொடரின் நாயகியாக புதுமுக நடிகை மதுமிதா ஏழை பெண்ணாக துர்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரிஷி என்ற கதாபாத்திரத்தில் விமல் வெங்கடேசன் பணக்காரவீட்டு பையனாக நடித்திருந்தார். அ. இராமச்சந்திரன் என்பவர் இந்த தொடரை இயக்கியிருந்தார். இந்தத் தொடருக்காக 2 கோடி ரூபாயில் பிரமாண்டமான அரண்மனை வீடு உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.[4] ஒளிபரப்பு நேரம் மாற்றம்இந்தத் தொடர் முதல் முதலில் 17 சூன் 2019 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:00 மணிக்கு ஒளிபரப்பாகி, நவம்பர் 4, 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி, பிப்ரவரி 24, 2020 முதல் மாலை 6 மணிக்கு நேரம் மாற்றப்பட்டு முடிவடைந்தது. மதிப்பீடுகள்கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
சர்வதேச ஒளிபரப்பு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia