பிறையன் லாரா துடுப்பாட்டக் கழகம் என்பது திரினிடாட்டும் தொபாகோவும் நாட்டில் சான் பெர்னாண்டோ நகரில் தாரூபாவில் உள்ள ஒரு பல்நோக்கு அரங்கமாகும். இது 2017 இல் கட்டி முடிக்கப்பட்டுத் திறக்கப்பட்டது.[1] இது பெரும்பாலும் துடுப்பாட்டப் போட்டிகளுக்குப் பயன்படுத்தப்படும். இது தெற்கு டிரினிடாட்டில், சான் பெர்னாண்டோ நகரின் மையப்பகுதிக்குச் சற்று வெளியே, சேர் சொலமன் ஒச்சோய் நெடுஞ்சாலை அருகில், திரினிடாட்டும் தொபாகோவுமின் முன்னாள் துடுப்பாட்ட மைதானமான குவாராக்காரா பூங்காவிலிருந்து தென்கிழக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
15, 000 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்ட இந்த மைதானத்திற்கு முன்னாள் மேற்கிந்திய தீவுகள் துடுப்பாட்ட அணித்தலைவர் பிரையன் லாராவின் பெயரிடப்பட்டது. அவர் 2008 அக்டோபர் 17இல் சச்சின் டெண்டுல்கர் முறியடிக்கும் வரை தேர்வுத்துடுப்பாட்டத்தில் அதிக ஓட்டங்களை எடுத்த சாதனை வீரராக இருந்தார்.
கரீபியன் பிரீமியர் லீக் பிரையன் லாரா துடுப்பாட்டக் கழகத்தை 2017 போட்டியின் இறுதிப் போட்டிகளை நடத்தத் தேர்ந்தெடுத்தது. இது மைதானத்தில் நடந்த முதல் உயர்மட்ட போட்டியாகும்.[2] இதைத் தொடர்ந்து, டிரினிடாட் மற்றும் டொபாகோ அரசாங்கம் 2018 முதல் 2020 வரை சிபிஎல் இறுதிப் போட்டிகளை பிரையன் லாரா துடுப்பாட்டக் கழகத்தில் நடத்துவதற்கான உரிமைகளை வாங்கியது.[3]
துடுப்பாட்டப் போட்டிகள்
செப்டம்பர் 2017 இல் கரீபியன் பிரீமியர் லீக் இறுதிப் போட்டி உட்பட பல போட்டிகள் இந்த மைதானத்தில் நடந்த முக்கிய போட்டிகளாகும்.[4] முதலாவது முதல் தரப் போட்டி நவம்பர் 2017 இல் நடைபெற்றது. 2017-18 மற்றும் 2018-19 டிரினிடாட்டும் டொபாகோவும் அணி தமது பிராந்திய நான்கு நாள் போட்டிகள் சிலவற்றை இங்கு விளையாடியது.[5]
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
டிரென்ட் போல்ட் (நியூ) தனது கடைசி இ20ப போட்டியில் விளையாடினார்.
லொக்கி பெர்கசன் (நியூ) இ20ப போட்டியில் தொடர்ச்சியாக ஓட்டங்கள் எதுவும் கொடுக்காமல் நான்கு ஓவர்கள் வீசிய இரண்டாவது பந்துவீச்சாளர் ஆனார். இதற்கு முன், 2021-இல் பனாமாவுக்கு எதிராக, கனடாவின் சாத் பின் சாபர் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளார்.[6]