பூவே செம்பூவே (தொலைக்காட்சித் தொடர்)
பூவே செம்பூவே என்பது கலைஞர் தொலைக்காட்சியில் 5 ஆகத்து 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:00 மணிக்கு ஒளிபரப்பாகும் குடும்ப உறவுக்கும், காக்கிச் சட்டைக்கும் இடையேயான போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொலைக்காட்சித் தொடர் ஆகும்.[1] லைட் சவுண்ட் மற்றும் மேஜிக் நிறுவனம் தயாரிக்கும் இந்த தொடருக்கு இயக்குநர் சார்லஸ் திரைக்கதை அமைத்திருக்கிறார். இயக்குநர் மனோ பாலாஜி என்பவர் இயக்க, மௌனிகா தைரியமானா காவல் அதிகாரியாக பத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். அண்ணி உமா மகேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஷமிதா வில்லத்தனத்தில் அடுத்த பரிமாணத்தை காட்டி மிரட்ட வருகிறார். இவரின் தம்பியாக புதுமுக நடிகர் நியாஸ் கான் என்பவர் கார்த்திகேயன் என்ற கதாபாத்திரத்தில் பத்ராவுக்கு ஜோடியாக நடிக்கின்றார்.[2] கதைச்சுருக்கம்பத்ரா என்ற நேர்மையான இளம் போலீஸ் அதிகாரி திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும் ஒரு பெண். தனது கணவன் மீதான காதலுக்கிடையே, கடமையை ஆற்ற பாடுபடும் பத்ரா, உமா மகேஷ்வரியால் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறாள்? தனது கணவனின் அன்பையும் குடும்பத்தினரின் மனதையும் எப்படி வெல்கிறார்? என்பது தான் இந்த தொடரின் கதை. நடிகர்கள்
உமா மகேஷ்வரி குடும்பத்தினர்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia