பூசண் இராமகிருஷ்ணா கவாய் (Bhushan Ramkrishna Gavai, பிறப்பு: 24 நவம்பர் 1960), மே 14 2025 முதல் இந்திய உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார்.[1] இவர் மும்பை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாக இருந்தார். மேலும் இவர் சில தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் வேந்தராகவும் பணியாற்றி வந்தார். [2][3][4] இவர் தேசிய சட்ட சேவை ஆணையத்தின் தலைமை அலுவல் புரவலராகவும் உள்ளார்.[5]
நாக்பூரிலுள்ள மகாராட்டிரா தேசியச் சட்டப் பல்கலைக்கழகத்தின் முதல்வராக இருந்தார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கண்ணா மே 13 அன்று ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார்.[6][7][8]
குடும்பம்
கவாய், முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஆளுனருமான இரா. சூ. கவாய் - கமலா இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தை இந்தியக் குடியரசுக் கட்சி (கவாய்) பிரிவை நிறுவி நடத்தி வந்தார். இவரது சகோதரர் இராஜேந்திர கவாயும் ஓர் அரசியல்வாதியாவார். இவரது குடும்பம் அம்பேத்கரால் ஈர்க்கப்பட்டு பௌத்த மதத்தைப் பின்பற்றுகிறது.[9][10][11][12]
↑"MNLU ACT, 2014"(PDF). Bombay High Court. Maharashtra State Government. Retrieved 11 September 2019.
↑Shrivastava, Amisha (13 November 2024). "Justice BR Gavai Appointed As Executive Chairman Of NALSA". Supreme Court News, Latest India Legal News, Supreme Court Updates, High Courts Updates, Judgments, Law Firms News, Law School News, Latest Legal News. Retrieved 23 November 2024.