பொன்னம்பலம் குமாரசுவாமி
முதலியார் பொன்னம்பலம் குமாரசுவாமி (Ponnambalam Coomaraswamy, 7 டிசம்பர் 1849 – 7 சூன் 1906)[1] என்பவர் இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும் இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினரும் ஆவார். ஆரம்ப வாழ்க்கை1849 டிசம்பர் 7 இல் பிறந்த இவர்[2][3] யாழ்ப்பாண மாவட்டம், மானிப்பாயைச் சேர்ந்த கேட் முதலியார் அ. பொன்னம்பலம் என்பவருக்குப் பிறந்தார்.[2] சேர் பொன்னம்பலம் இராமநாதன், சேர் பொன்னம்பலம் அருணாசலம் ஆகியோர் இவரது சகோதரர்கள் ஆவர்.[2] குமாரசுவாமி கொழும்பு றோயல் கல்லூரியிலும், சென்னை மாநிலக் கல்லூரியிலும் கல்வி கற்றார்.[2] பணிதனது பட்டப் படிப்பை முடித்துக் கொண்ட குமாரசுவாமி வழக்கறிஞர் தொழிலில் இணைந்து கொண்டார்.[2] அரசியலில்கொழும்பு மாநகர சபையில் சனவரி 1873 முதல் அக்டோபர் 1879 வரையும், பின்னர் நவம்பர் 1885 முதல் டிசம்பர் 1889 வரையும் உறுப்பினராகப் பதவியில் இருந்தார்.[4] 1893 இல் இவர் இலங்கை சட்டவாக்கப் பேரவையில் தமிழர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அதிகாரபூர்வமற்ற உறுப்பினராக சேர் பொன். இராமநாதனிற்குப் பதிலாக நியமிக்கப்பட்டார்.[2][5] யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையின் தலைவராக இருந்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை நிறுவுவதற்கு முன்னின்று உழைத்தார்.[2] கொழும்பு கொம்பனித் தெருவில் முருகன் கோவில் ஒன்றையும் நிறுவினார்.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia