மகாராணி திவ்யா சிங்
மகாராணி திவ்யா சிங் (Maharani Divya Singh) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1963 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவையின் முன்னாள் உறுப்பினர் என்று அறியப்படுகிறார். பாரதிய சனதா கட்சியின் வேட்பாளராக இராசத்தான் மாநிலத்தில் உள்ள பரத்பூர் தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] ஆரம்ப கால வாழ்க்கைமகாராணி திவ்யா சிங் 1963 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் இலக்னோவில் பிறந்தார். பிப்ரவரி 15, 1989 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதியன்று இவர் மகாராச்சு விசுவேந்திர சிங்கை மணந்தார். [1] கல்வி & தொழில்இசபெல்லா தோபர்ன் கல்லூரியில் திவ்யா கலை பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றார். 1996 ஆம் ஆண்டில் பரத்பூர் மாவட்ட மன்றத்தில் உறுப்பினரானார். பின்னர், 11 ஆவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] 2012 ஆம் ஆண்டில் திவ்யா தனிப்பட்ட காரணங்களுக்காக 2011 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட இராசத்தான் பொது சேவை ஆணையத்தின் உறுப்பினர் பதவியிலிருந்து பதவி விலகினார்.[2] மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia