மாவட்ட ஊராட்சி![]() மாவட்ட ஊராட்சி (District Panchayat) என்பது இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் மாவட்ட அளவில் செயல்படும் உள்ளாட்சி அமைப்பு ஆகும். உள்ளாட்சி அமைப்புகளில் இது மூன்றாம்படியில் உள்ளது. இதன் உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதன் தலைவர் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். தமிழ்நாடுதமிழ்நாட்டில் சென்னை மாவட்டம் தவிர்த்த ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட ஊராட்சிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 50,000 மக்கள்தொகைக்கு ஒருவர் என்ற அடிப்படையில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் வாக்காளர்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மாவட்ட ஊராட்சியின் தலைவர் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதாவது உறுப்பினர்கள் தங்களுக்குள் ஒருவரைத் தலைவராக தேர்ந்தெடுக்கிறார்கள். இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.[1] மாவட்ட ஊராட்சியின் கடமைகள்:
மாவட்டத் திட்டக் குழு
மாவட்ட முழுமைக்குமான வளர்ச்சித்திட்டம் தயாரித்து மாநிலத் திட்டக்குழுவிற்கு அனுப்பி வைப்பது மாவட்டத் திட்டக்குழுவின் கடமை ஆகும். இதனையும் காண்க
மேற்கோள்கள்வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia