மல்லிகார்ச்சுன் மன்சூர்
மல்லிகார்ச்சுன் மன்சூர் (Mallikarjun Mansur) (31 திசம்பர் 1910 - 12 செப்டம்பர் 1992) கருநாடகாவைச் சேர்ந்த ஒரு இந்துஸ்தானி இசைப் பாடகராவார், ஜெய்ப்பூர்-அட்ரௌலி கரானாவில் (பாடும் பாணி) கியால் பாணியில் சிறந்த பாடகர்.[1] ஆரம்பகால வாழ்க்கையும் பின்னணியும்மல்லிகார்ச்சுன் 1910 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று கர்நாடகாவின் தர்வாடுக்கு மேற்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள மன்சூர் என்ற கிராமத்தில் பிறந்தார்.[2] இவரது தந்தை, பீமாராயப்பா, கிராமத் தலைவராக இருந்தார். தொழில் மூலம் ஒரு விவசாயியாகவும், இசையை மிகவும் விரும்பியவராகவும் இருந்தார். இவருக்கு நான்கு சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் இருந்தனர். இவரது அண்ணன் பசவராசு ஒரு நாடகக் குழுவைக் கொண்டிருந்தார். இதனால் ஒன்பது வயதில் மல்லிகார்ச்சுன் ஒரு நாடகத்தில் ஒரு சிறிய பாத்திரத்தை செய்தார்.[3] தனது மகனிடமுள்ள திறமையைக் கண்டறிந்து, இவரது தந்தை இவரை ஒரு பயண யக்சகானக் குழுவில் ஈடுபடுத்தினார். இந்த குழுவின் உரிமையாளர் இவரது மென்மையான குரலை விரும்பினார். மேலும் நாடக-நிகழ்ச்சிகளின் போது பல்வேறு வகையான பாடல்களைப் பாட இவரை ஊக்குவித்தார். இவரது நிகழ்ச்சியை கண்ட அப்பையா சுவாமி என்பவர் இவர இதன்னுடன் அழைத்துச் சென்றார். அவரின் கீழ் கர்நாடக இசையில் தனது ஆரம்ப பயிற்சி பெற்றார். குவாலியர் கரானாவைச் சேர்ந்த மீரஜ்ஜின் நீலகண்ட புவா அலுர்மத்தின் கீழ் இந்துஸ்தானி இசையில் அறிமுகமானார். பிந்தையவர் இவரை 1920 களின் பிற்பகுதியில் ஜெய்ப்பூர்-அட்ரௌலி கரானாவின் உறுதியான மற்றும் அப்போதைய தேசபக்தரான அல்லாதியா கானிடம் (1855-1946) அழைத்து வந்தார். அவர் இவரை தனது மூத்த மகன் மஞ்சி கானிடம் மேலதிகப் பயிற்சிக்காக அனுப்பி வைத்தார். மஞ்சி கானின் அகால மரணத்தைத் தொடர்ந்து, இவர் மஞ்சி கானின் தம்பி புர்ஜி கானின் ஆதரவின் கீழ் வந்தார். புர்ஜி கானின் கீழ் இந்த சீர்ப்படுத்தல் இவரது பாடும் பாணியில் மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியது.[3] ![]() விருதுகள்1970 இல் பத்மசிறீ, 1976 இல் பத்ம பூசண், 1992 ல் பத்ம விபூசண் ஆகிய மூன்று தேசிய பத்ம விருதுகளையும் பெற்றுள்ளார்.[4][5] 1982 ஆம் ஆண்டில், இந்தியாவின் தேசிய இசை, நடனம் மற்றும் நாடக அகாதமியான சங்கீத நாடக அகாதமி வழங்கிய மிக உயர்ந்த கௌரவமான இவருக்கு சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் வழங்கப்பட்டது.[6] புத்தகங்கள்மன்சூர் கன்னடத்தில் நன்னா ரசாயத்ரே என்ற சுயசரிதை புத்தகத்தை எழுதினார்.[7] இது இவரது மகன் இராஜசேகர் மன்சூர் அவர்களால் மை ஜர்னி இன் மியூசிக் என்ற புத்தகமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட வாழ்க்கைமன்சூர் கங்காம்மா என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஏழு மகள்களும் இராசசேகர் மன்சூர் என்ற ஒரு மகனும் இருக்கின்றனர். மன்சூரின் குழந்தைகளில், இராசசேகரும், நீலா கோட்லியும் பாடகர்களாவர்.[8] இறப்புகோமா நிலையில் இருந்த மன்சூர் 1992 செப்டம்பர் 12 ஆம் தேதி, தார்வாட்டில் இறந்தார். அவருக்கு மாநில அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடத்தியது.[9] மரியாதை'மிருத்யுஞ்சயா' என்ற இவரது இல்லம் இன்று இவரது நினைவாக ஒரு அருங்காட்சியகத்தை கொண்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை கர்நாடக மாநில அரசின் கன்னட மற்றும் கலாச்சாரத் துறையின் கீழ் செயல்படும் டாக்டர் மல்லிகார்ச்சுன் மன்சூர் தேசிய நினைவு அறக்கட்டளை நிர்வகிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அறக்கட்டளை செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இவரது நினைவாண்டை நினைவுகூரும் வகையில் ஒரு தேசிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறது. அறக்கட்டளை ஆண்டுதோறும் திசம்பர் 31 அன்று மூன்று விருதுகளை அறிவிக்கிறது. இவரது பிறந்த நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில், 2011 சனவரி 1 முதல் 3 வரை தர்வாடு, ஹூப்ளி ஆகிய இடங்களில் மூன்று நாள் இசை விழா ஏற்பாடு செய்யப்பட்ட. இதில் இந்தியா முழுவதும் உள்ள பாடகர்கள் நிகழ்ச்சிகளையும் நிகழ்ச்சிகளையும் அவரது பிறந்த இடமான மன்சூர் கிராமத்தில் உள்ள கரியம்மா தேவி கோயில் வளாகத்தில் நடைபெற்றது.[10][11] மன்சூரில் உள்ள அவரது மூதாதையர் இல்லமும் நினைவுச்சின்னமாக மாற்றப்பட்டது.[12] 2013 ஆம் ஆண்டில், தார்வார் கர்நாடக கல்லூரி வளாகத்தில் சிறீஜன இரங்கமந்திரில் நடைபெற்ற விழாவில் அனைத்திந்திய வானொலி அதன் காப்பகங்களிலிருந்து இவரது இசைத் தொகுப்பைக் கொண்டு "ஆகாஷ்வனி சங்கீத்" என்ற ஐந்து ஒலிவடிவ குறுந்தகட்டினை கொண்ட தொகுப்பினை வெளியிடப்பட்டது.[13] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia