மல்லு பாட்டி விக்ரமார்கா
மல்லு பாட்டி விக்ரமார்கா (Mallu Bhatti Vikramarka) (பிறப்பு 15 ஜூன் 1961) இரண்டாவது தெலங்காணா சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் 2009 மற்றும் 2014 தேர்தல்களில் சட்டப் பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 முதல் 2011 வரை ஆந்திரப் பிரதேச அரசின் தலைமைக் கொறடாவாகவும், 2011 முதல் 2014 வரை ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார். இவர் மத்திரா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1] தொழில்மல்லு பாட்டி விக்ரமார்கா, 2009-ம் ஆண்டு முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 இல் தலைமைக் கொறடா ஆனார். [2] [3] அதற்கு முன் சட்டப்பேரவையின் மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 4 ஜூன் 2011 அன்று ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019 ஜனவரி 18 அன்று, 2வது தெலங்காணா சட்டப்பேரவையின் காங்கிரசு சட்டமன்றக் கட்சியின் தலைவராக இராகுல் காந்தி நியமித்தார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia