மழவராயனேந்தல் ஊராட்சி (Malavarayanendal Gram Panchayat), தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1975 ஆகும். இவர்களில் பெண்கள் 983 பேரும் ஆண்கள் 992 பேரும் உள்ளனர்.இவ்வூரில் உள்ள புலியாருடைய அய்யனார் கோவிலில் பழமையான சுடுமண் குதிரை உள்ளது. அதன் மேல் அய்யனார் அமர்ந்துள்ளார்.இக்கோவிலில் உள்ள புலியாருடைய அய்யனார் மற்றும் கருப்பசாமி ,ராக்கச்சி அம்மன் சிலைகள் பழமையானவை.இவ்வூரில் முளைப்பாரி மற்றும் அய்யனார் கோவில் மாசி களரி திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும்.இந்த ஊராட்சியில் மழவராயனேந்தல் மற்றும் சம்பராயனேந்தல் என்னும் இரண்டு ஊர்களே உள்ளன.சம்பராயனேந்தல் என்னும் ஊரில் திருவாளி கருப்பண்ணசாமி,சமயண சாமிகோவில், வீரமுத்து மாரியம்மன், விநாயகர் கோவில் மற்றும் பெருமாள் கோவில் உள்ளன.திருவாளி கருப்பண்ணசாமி கோவில் கிருஷ்ண ஜெயந்தி திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும்.
அடிப்படை வசதிகள்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]
அடிப்படை வசதிகள் |
எண்ணிக்கை
|
குடிநீர் இணைப்புகள் |
93
|
சிறு மின்விசைக் குழாய்கள் |
6
|
கைக்குழாய்கள் |
13
|
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் |
4
|
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் |
|
உள்ளாட்சிக் கட்டடங்கள் |
8
|
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் |
2
|
ஊரணிகள் அல்லது குளங்கள் |
2
|
விளையாட்டு மையங்கள் |
|
சந்தைகள் |
|
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் |
59
|
ஊராட்சிச் சாலைகள் |
6
|
பேருந்து நிலையங்கள் |
|
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் |
6
|
சிற்றூர்கள்
இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:
- சம்பராயனேந்தல்
- மழவராயனேந்தல்
சான்றுகள்