மஹாந்த் பாலாக்நாத்
மஹாந்த் பாலாக்நாத் (Mahant Balaknath) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் ராஜஸ்தானின் ஆல்வார் மக்களவைத் தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் பாபா மஸ்த்நாத் பல்கலைக்கழகத்தின் (பி.எம்.யூ) வேந்தராவார்.[1] இந்து மதத்தின் நாத சைவப் பிரிவின் 8வது தலைவர்/ மஹாந்த் ஆவார்.[2] 29 ஜூலை 2016 அன்று, யோகி ஆதித்யநாத் மற்றும் பாபா ராம்தேவ் ஆகியோர் கலந்து கொண்ட ஒரு விழாவில் மகந்த் சந்த்நாத் பாலாக்நாத்தை தனது வாரிசாக அறிவித்தார்.[3][4][5] ஆரம்ப கால வாழ்க்கைஇவர் சிறு வயதிலேயே குருமுக் என்று பாபா கெதநாத்தால் பெயரிட்டார்.[6] இவர் 1985 முதல் 1991 வரை (6 வயது வரை) மத்சியேந்திர மகாராஜ் ஆசிரமத்தில் வசித்து வந்தார். அதன் பிறகு மஹந்த் சந்த்நாத்துடன் அஸ்தால் போஹர் மடத்திற்குச் சென்றார். அரசியல் வாழ்க்கைமக்களவை உறுப்பின்ராகராஜஸ்தானின் ஆல்வாரில் இருந்து மக்களவைக்கான பாரதிய ஜனதா வேட்பாளராகப் பரிந்துரைக்கப்பட்ட இவர், 2019ஆம் ஆண்டு தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸின் பன்வர் ஜிதேந்திர சிங்கை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.[7] சட்டப் பேரரவை உறுப்பினராக2023 இராசத்தான் சட்டமன்றத் தேர்தலில் திஜரா சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி வேட்பாளர் இமரான் கானை எதிர்த்து போட்டியிட்டு வென்றார். எனவே தனது மக்களவை உறுப்பினர் பதவியை துறந்தார். இவர் இராஜஸ்தான் முதல்வராக பொறுப்பேற்கும் போட்டியில் உள்ளார்.[8] மேலும் காண்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia