மார்தாண்ட சூரியன் கோயிலை கார்கோடப் பேரரசின் மூன்றாம் மன்னர் லலிதாத்தியன்பொ.ஊ. எட்டாம் நூற்றாண்டில் கட்டினார்.[5][6]பொ.ஊ. 725-756 காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது.[7] மார்தாண்ட சூரியன் கோயிலின் அஸ்திவாரம் பொ.ஊ. 370 – 500 கால கட்டத்தில் அமைக்கப்பட்டது. கோயில் அமைப்பு கார்கோடகப் பேரரசன் இரணாதித்தியன் காலம் முதல் துவக்கப்பட்டது.[8][9]
பொ.ஊ. 15ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், சிகந்தர் புட்ஷிகன் எனும் இஸ்லாமிய தீவிரவாத ஆட்சியாளாரால் மார்த்தாண்ட சூரியன் கோயில் முழுவதுமாக சிதைக்கப்பட்டது.[10][11]
கோயில் அமைப்பு
மார்த்தாண்ட சூரியன் கோயில் காந்தாரம், சீனம், கிரேக்க கட்டிடக் கலை நயத்தில் கட்டப்பட்டுள்ளது.[12][13]
220 அடி நீளமும், 142 அகலமும் கொண்ட சூரிய கோயில் வளாகத்தில் 84 சிறிய சன்னதிகள் கொண்டிருந்தது.[14]
இக்கோயிலில் வேத கால தெய்வங்களான சூரியன், விஷ்ணு, கங்கை, யமுனையின் அழகிய சிற்பங்கள் உள்ளது.[15]
கோயில் முதன்மைப் பகுதிக்குச் செல்லும் நுழைவாயிலிலிருந்து காணும் இடிபாடுகளின் தோற்றம்
புனரமைக்கப்பட்ட மார்த்தாண்ட சூரியன் கோயிலின் ஓவியம், ஆண்டு 1870கோயில் நுழைவு வாயில்மார்தாண்ட சூரியன் கோயிலில் அழகிய சிற்பங்கள்
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தலம்
ஜம்மு காஷ்மீரில் உள்ள இக்கோயிலை, இந்தியத் தொல்லியல் ஆய்வகம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அறிவித்துள்ளது.[16] இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களில் ஒன்றாக இச்சூரியன் கோயிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.[17]
↑Hindu temples were felled to the ground and for one year a large establishment was maintained for the demolition of the grand Martand temple. But when the massive masonry resisted all efforts, it was set on fire and the noble buildings cruelly defaced.-Firishta, Muhammad Qãsim Hindû Shãh; John Briggs (translator) (1829–1981 Reprint). Tãrîkh-i-Firishta (History of the Rise of the Mahomedan Power in India). New Delhi