முல்தான் சூரியக் கோயில்
![]() முல்தான் சூரியக் கோயில் (Sun Temple of Multan), பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முல்தான் நகரத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்துக் கோவில் ஆகும். இதன் காலம் பொ.ஊ. 614 அல்லது அதற்கும் முன்னர் ஆகும்.[1][2][3] வரலாறுதொன்ம வரலாறுகிருஷ்ணரின் மகன் சாம்பன் தனக்கு பீடித்திருந்த தொழு நோய் நீங்க இக்கோயிலின் சூரிய பகவானை வேண்டியதாக பாகவத புராணம் கூறுகிறது.[4][5][6] மத்திய கால வரலாறுசீன பௌத்த யாத்தீகர் யுவான் சுவாங் பொ.ஊ. 641-ஆம் ஆண்டில் இக்கோயிலுக்கு வருகை புரிந்தது குறித்து தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இச்சூரியக் கோயிலில் சிவன், கௌதம புத்தர் சன்னதிகள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.[7] பாரசீக வரலாற்று அறிஞர் அல்-பிருனி பொ.ஊ. 11-ஆம் நூற்றாண்டில் முல்தான் நகரத்திற்கு வருகை புரிந்த போது இச்சூரியக் கோயிலை பற்றி விவரித்துள்ளார். முல்தான் சூரியக் கோவிலை அழித்தல்பொ.ஊ. 10-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பஞ்சாப் பகுதியை ஆட்சி செய்த இசுலாமிய ஆட்சியாளர்கள் இச்சூரியக் கோயில வளாகத்தில் மசூதி மற்றும் முல்தான் நகரத்தையும் எழுப்பினர்.[8] 11-ஆம் நூற்றாண்டில் கஜினி முகமது இச்சூரியக் கோயிலை முற்றிலும் சிதைத்து அழித்தான்.[8] இக்கோயில் இசுலாமியர்களால் சிதைக்கப்பட்டதால் இந்துக்கள் இச்சூரியக் கோயிலுக்கு வருகை தருவதை நிறுத்தினர் என அல்-பிருனி தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.[9] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia