மாலகண்ட் மாவட்டம்
மாலகண்ட் மாவட்டம் (Malakand District), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் பேட்கேலா நகரம் ஆகும். மலைகள் சூழ்ந்த இம்மாவட்டத்தில் சுவாத் ஆறு பாய்கிறது. மாவட்ட நிர்வாகம்இம்மாவட்டம் தர்கை மற்றும் பேட்கேலா எனும் 2 தாலுகாக்களைக் கொண்டது. நாடாளுமன்றத் தொகுதிகள்இம்மாவட்டம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு ஒரு உறுப்பினரை தேர்வு செய்கிறது.[3] மாகாணச் சட்டமன்றத் தொகுதிகள்இம்மாவட்ட்ம் மாகாணச் சட்டமன்றத்திற்கு இரண்டு உறுப்பினர்களை தேர்வு செய்கிறது. மக்கள் தொகை பரம்பல்2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மாலகண்ட் மாவட்ட மக்கள் தொகை 7,17,806 ஆகும். அதில் ஆண்கள் 3,60,440 மற்றும் பெண்கள் 3,57,333 ஆக உள்ளனர். இம்மாவட்ட மக்களில் 90.57% விழுக்காட்டினர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். எழுத்தறிவு 61.83% ஆக உள்ளது. பஷ்தூ மொழி 98.38% விழுக்காட்டினர் பேசுகின்றனர். சிறுபான்மை சமயத்தவர்கள் 471 பேர் உள்ளனர்.[1] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia