மிக்கிலினேனி (நடிகர்)மிக்கிலினேனி ராதாகிருஷ்ண மூர்த்தி (7 ஜூலை 1914 - 23 பிப்ரவரி 2011) என்பவர் இந்திய நடிகராவார். இவர் தெலுங்கு திரைத்துறையில் நடித்தமைக்காக பெயர் பெற்றவர். [1] பிரஜா நாட்டிய மண்டலி என்ற நாடகக் குழுவை நிறுவியவர். [2] தெலுங்கு நாடகம் மற்றும் திரைத்துறையில் ஆற்றிய பங்களிப்பிற்காக, ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் கெளரவ கலாப்ரபூர்ணா விருதைப் பெற்றுள்ளார். [3] [4] ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில்இவர் ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கோலவென்னு கிராமத்தில் பிறந்தார். நாடகத்துறையில் நுழைவதற்கு முன்பு, கால்நடை மருத்துவத்தில் பட்டையப்படிப்பினைப் படித்தார். 1949 ஆம் ஆண்டு கோ. சூ. பிரகாஷ் ராவ் இயக்கிய தீக்ஷா திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். [5] [6] இவர் கிட்டத்தட்ட 350 திரைப்படங்களில் நடித்துள்ளார் அவற்றில் 150 படங்கள் பி.விட்டலாச்சார்யா திரைப்படங்களாகும். இவர் என்.டி.ராமராவ் உடனான தொடர்புக்காக அறியப்பட்டார். [3] [7] [8] விருதுகள்மற்றவை
திரைப்படங்கள்நடிகராக
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia