முகுந்த் வரதராஜன்
மேஜர் முகுந்த் வரதராஜன் ஏ.சி (Mukund Varadarajan), இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்தார். ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நடந்த ஒரு மோதலில் மூன்று பயங்கரவாதிகளைக் கொன்றதற்காக, 2014 ஆம் ஆண்டில், இந்தியாவின் மிக உயர்ந்த அமைதிக்கால துணிச்சலான அசோகச் சக்கர விருது இவருக்கு மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது. தனிப்பட்ட வாழ்க்கைமேஜர் முகுந்த் வரதராஜன், சென்னையை அடுத்த தாம்பரம் நகரில், ஆர். வரதராஜன் மற்றும் கீதாவுக்கு மகனாக, 1983ம் ஆண்டு ஏப்ரல் 12 அன்று பிறந்தார்.[5] இவரது தாத்தா இராகவா[1] மற்றும் இவரது இரண்டு மாமாக்களும் இராணுவத்தில் பணியாற்றினர். இது முகுந்த் வரதராஜனை இராணுவத்தில் சேரத் தூண்டியது. முகுந்த் வரதராஜனுக்கு ஸ்வேதா, நித்யா என்ற இரண்டு சகோதரிகள் உள்ளனர். முகுந்த் தனது நீண்டகால காதலியான கேரளாவை சேர்ந்த இந்தூ ரெபேக்கா வர்கீஸை, ஆகஸ்ட் 28, 2009 அன்று திருமணம் செய்தார்.[6] இவர்களுக்கு அஸ்ரேயா என்ற ஒரு மகள் மார்ச் 17, 2011 இல் பிறந்தார்.[7] முகுந்த், தனது இளங்கலை வணிகவியல் பட்டத்தை காஞ்சிபுரம் ஏனாத்தூரில் உள்ள ஸ்ரீ சந்திரசேகரேந்தரா சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயாவில் பெற்றார். மேலும், தாம்பரத்திலுள்ள, சென்னை கிறித்துவக் கல்லூரியில், இதழியலில் ஒரு பட்டயப் படிப்பையும் முடித்தார். முந்தைய சேவைமுகுந்த் வரதராஜன், அதிகாரிகள் பயிற்சி அகாதமியின் முன்னாள் மாணவராக இருந்தார். பட்டம் பெற்ற பிறகு, 2006 ஆம் ஆண்டில் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் (22 ராஜ்புத்) லெப்டினெண்டாக நியமிக்கப்பட்டார். அவர் மத்திய பிரதேசத்தின் மோவ் நகரில் உள்ள காலாட்படை பள்ளியில் பணியாற்றினார். மேலும், லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தூதுக்குழுவின் ஒரு பகுதியாக இருந்து, அமைதி மற்றும் உலகளாவிய பாதுகாப்பு பயிற்சியையும் கற்றுக் கொண்டார்.[1] டிசம்பர் 2012 இல், அவர் ராஷ்டிரிய ரைஃபிள்ஸின் 44 வது பட்டாலியனில் ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பணி அமர்த்தப்பட்டார். வீரமரணம்![]() ஏப்ரல் 25, 2014 அன்று, சோபியான் மாவட்டத்தில் உள்ள, பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த குவாசிபத்ரி கிராமத்தைச் சேர்ந்த சில குடும்பங்களை விடுவிக்க பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைக்கு முகுந்த் வரதராஜன் தலைமை தாங்கினார். இந்தத் தாக்குதலின் போது, இவரது குழு சுமார் 6 தனி பிரிவுகளாகப் பிரிந்து போராடியது. இருந்தும் எதிரிகளின் சக்தி வாய்ந்த குண்டு தாக்குதலில் அக்குழு தீக்கிரையானது. ஆனாலும், அக்குழுவின் அதிகாரியான இவர் விரைவாகச் செயல்பட்டு, 24 மணி நேரத்திற்கு முன்னர் தேர்தல் அதிகாரிகளைக் கொன்றதற்குக் காரணமான ஹிஸ்புல் முஜாஹிதீனின் அமைப்பைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகளையும் கொன்றார். இருப்பினும், தாக்குதலின் போது இவர் படுகாயமடைந்து சிகிசைக்காக வெளியேற்றப்பட்டார். ஆனால், உடலில் ஏற்பட்ட பல காயங்கள் காரணமாக இவர் வீர மரணம் அடைந்தார்.[8][9][10][11] இந்த நடவடிக்கையின் போது, இவர் செய்த துணிச்சலான செயல்களுக்காக, "கடமையின் அழைப்புக்கு அப்பாற்பட்ட வீரம் காட்டியதற்காக", 2014 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிக உயர்ந்த அமைதிக்கால துணிச்சலுக்கான விருதான அசோக சக்கரம் விருது, இவருக்கு மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது.[9] "மோதலின் போது, தனது உயிர்த் தியாகத்திற்கு முன் மேஜர் முகுந்த் வெளிப்படுத்திய மிகச்சிறந்த தலைமைத்துவ திறன், துணிச்சல், உடனடி திட்டமிடல் ஆகியன இசுபுல் முசாகிதின் அமைப்பின் உயர்மட்ட தீவிரவாதிகள் மூவரை ஒழித்துக்கட்டும் போது உச்சமடைந்தது போற்றுதற்குரியது .." என்று இந்திய அரசு விருது வழங்கும்போது மேற்கோள் காட்டியது. முகுந்த் வரதராஜன், தமிழ்நாட்டில், அசோக சக்கர விருது பெற்ற நான்காவது மனிதராகக் குறிப்பிடப்படுகிறார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia