சிறி சந்தரசேகரேந்தரா சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயா
இந்தியாவின் தமிழ்நாடு, காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயா (SCSVMV) அவர்களின் புனிதமான பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிஜி மற்றும் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிஜி ஆகியோரின் ஆசீர்வாதத்துடன் நிறுவப்பட்டது மற்றும் இது 1993 இல் நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெற்றது. 1993 ஆம் ஆண்டு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் அறக்கட்டளையின் கீழ் உருவாக்கப்பட்ட ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயா, காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் ஏனாத்தூரில் 50 ஏக்கர் பரப்பளவில் பரந்த வளாகத்தில் அமைந்துள்ளது. சென்னை பூந்தமல்லியில் பல்கலைக்கழக வளாகம் உள்ளது, ஆயுர்வேத கல்லூரி, ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவமனை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. உலகளாவிய கண்ணோட்டத்துடன் பாரம்பரிய அறிவை நவீன அறிவியல் நடைமுறைகளுடன் ஒருங்கிணைப்பதில் பல்கலைக்கழகம் தனித்துவமான கவனம் செலுத்துகிறது. அமைவிடம்பல்கலைக்கழகம் ஏனாத்தூரில் 50 ஏக்கர்கள் (200,000 m2) பரப்பளவில் காஞ்சியிலிருந்து 4 கி.மீ. தொலைவிலும் சென்னையிலிருந்து 76 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. பல முன்னணி கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு உடன்பாடு ஏற்படுத்திக்கொண்டு சிறந்த கல்வி வழங்கும் முனைப்புடன் இயங்குகிறது. ஆராய்ச்சிகள்ஆய்வு மற்றும் மேம்படுத்தல் தலைவரின் கீழ் ஒவ்வொரு துறையிலும் ஆராய்ச்சிகளையும் மேம்படுத்தல்களையும் பல்கலைக்கழகம் ஊக்குவிக்கிறது. முனைவர் கல்வித்திட்டங்கள் அனைத்து துறைகளிலும் அளிக்கப்படுகின்றன. சமசுகிருதம் மற்றும் இந்தியப் பண்பாடு துறை 25க்கும் மேற்பட்ட முனைவர் பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது. முனைவர் கல்வித்திட்டங்களுக்கு ஆண்டுக்கு இருமுறை சேர்க்கைகள் வழங்கப்படுகின்றன. இப்பல்கலைக்கழக நூலகத்தில் பழமையான ஒலைச்சுவடிகள் காப்பகம் ஒன்றிருப்பது குறிப்பிடத்தக்கது. கல்வித் துறைகள்பல்கலைக்கழகத்தில் கீழ்வரும் துறைகள் உள்ளன:
மேற்கோள்கள்வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia