மூன்று இராச்சியங்கள் (சீனா)
மூன்று இராச்சியங்கள் (The Three Kingdoms) என்பது கிபி 220 இருந்து 280 வரையான சீனாவின் வரலாற்றுக் காலப் பகுதி ஆகும். ஆன் அரசமரபின் வீழ்ச்சியுடன் தொடங்கும் மூன்று இராச்சியங்களின் காலப் பகுதி, இக் காலப் பகுதியின் கடைசி வு இராச்சியம் jin அரசமரால் கைப்பற்றப்படும் வரையான காலப் பகுதி ஆகும். சில வரலாற்று ஆசிரியர்கள் இந்தக் காலப் பகுதியின் தொடக்கத்தை 180 நிகழ்ந்த மஞ்சள் தலைப்பாய் புரட்சியில் இருந்து வரையறை செய்வர்.[1][2][3] இந்தக் காலப் பகுதியில் இன்றைய சீனாவின் பெரும் பகுதி மூன்று இராச்சியங்களாக இருந்தது. வேய் (Wei, 魏),, சூ (Shu, 蜀), வூ (Wu 吳) என்பவை அவை ஆகும். சீனாவில் மிகவும் கடுமையான போர்கள் நடந்த காலங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தச் சிறு காலப் பகுதி சீன, யப்பானிய, கொரிய, வியட்நாமிய இலக்கியத்தில் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. இவற்றுள் மிகவும் அறியப்பட்ட நூல் மூன்று இராச்சியங்களின் கதை (Romance of the Three Kingdoms) ஆகும். இந்தக் காலப் பகுதியில் முக்கிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நடந்தன. சூகே லியாங் மர எருமையை உருவாக்கினார். தொடர் சதுர-வில் என்ற ஆயுதத்தை செப்பமாக்கினார். மா-யுன் பல கண்டுபிடிப்புகளைச் செய்தார். இவர் நீர் ஆற்றலில் இயங்கும் பொம்மைகளை உருவாக்கினார். நீர்ப்பாய்ச்சலுக்கு சதுர மேடைச் சங்கிலி பம்பியைக் கண்டுபிடித்தார். இவர் மிக முன்னேற்றகரமான தென்சுட்டுத் தேர் என்பதையும் உருவாக்கினார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia