மூஸ் மாகாணம்
மூஸ் மாகாணம் (Muş Province, துருக்கியம்: Muş ili , Kurdish ) என்பது கிழக்கு துருக்கியில் உள்ள ஒரு மாகாணமாகும் . இது 8,196 கி.மீ. 2 பரப்பளவு கொண்டுள்ளது. மேலும் 2010 ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி இதன் மக்கள் தொகை 406,886 ஆகும். இது 2000 ஆம் ஆண்டில் 453,654 ஆக இருந்தது. மாகாண தலைநகரம் மூஸ் நகரம் ஆகும். மூஸ் மாகாணத்தில் உள்ள மற்றொரு நகரம், மலாஸ்கர்ட் ( மான்சிகர்ட் ), இது 1071 இல் நிகழ்ந்த மான்சிகர்ட் போருக்காக பிரபலமானது. மாகாணத்தின் பெரும்பான்மையான மக்கள் குர்து மக்களாவர். 2018 அக்டோபரில் ஆல்கர் குண்டாச்சை மாகாண ஆளுநராக ரசிப் தைய்யிப் எர்டோகன் நியமித்தார்.[2] மாவட்டங்கள்முஸ் மாகாணம் 6 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது (தலைநகர் மாவட்டம் தடித்து காட்டபட்டுள்ளது):
பொருளாதாரம்வரலாற்று ரீதியாக, மூஸ் மகாணம் கோதுமை உற்பத்தி செய்வதில் பெயர் பெற்றது.[3] மாகாணத்தில் மடர் என்னும் தாவரம் வளர்கிறது. இதை உள்ளூர்வாசிகள் சாயத்திற்காகப் பயன்படுத்தினர் .[4] இப்பகுதியில் உப்பு சுரங்கங்களும் இருந்தன . 1920 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி, அது ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் போதுமான அளவு இருப்பதாகக் கூறப்பட்டது.[5] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia