மெகராஜ் மாலிக்
மெகராஜ் தின் மாலிக் (Mehraj Din Malik) (பிறப்பு 1988) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ஆவார். 2022 ஆம் ஆண்டு வரை சம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மியின் முதல் மற்றும் ஒரே வெற்றி வேட்பாளர். அவர் ககாரா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட வளர்ச்சிக் குழு (DDC) உறுப்பினர் ஆவார். [1] 17 அக்டோபர் 2022 அன்று, ஆம் ஆத்மி கட்சி அவரை சம்மு காஷ்மீரின் மாநில ஒருங்கிணைப்புக் குழு ஆம் ஆத்மி கட்சியின் இணைத் தலைவராக நியமித்தது. தொழில் வாழ்க்கை2013 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து 2014 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட பிறகு மெஹ்ராஜ் மாலிக் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். [2] 2020 இல், இவர் மாவட்ட வளர்சிக்குழு உறுப்பினர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக 3511 வித்தியாசத்தில் வெற்றி பெற்று ககாரா தொகுதிக்கு மாவட்ட வளர்ச்சிக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [3] ஜம்மு காஷ்மீரில் இருந்து ஆம் ஆத்மி கட்சியின் முதல் வெற்றி வேட்பாளராகவும், 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஜம்மு காஷ்மீரில் இருந்து அக்கட்சியின் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் இவரே. [4] 17 அக்டோபர் 2022 அன்று, ஆம் ஆத்மி கட்சி அவரை சம்மு காசுமீர் மாநில ஒருங்கிணைப்புக் குழு ஆம் ஆத்மி கட்சியின் இணைத் தலைவராக நியமித்தது. [5] "மஜ்ஜா மஜ்ஜா ராஜ் கரேகா" ( transl. மெஹ்ராஜ் ஆட்சி செய்வார் ) என்பது ஒரு தனித்துவமான முழக்கம், இது மெஹ்ராஜ் மாலிக் எந்தப் பேரணியை ஏற்பாடு செய்தாலும் எழுப்பப்படுகிறது. [6] கைதுஜம்முவில் நிலம் அபகரிப்பு இயக்கத்திற்கு எதிரான போராட்டத்திற்குப் பிறகு, மெகராஜ் மாலிக் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டார். வன்முறை சம்பவம் நடந்த இடத்தில் மாலிக் பேச்சு நடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் காரணமாக அதிகாரிகள் இவரைக் கைது செய்தனர். பிப்ரவரி 10, 2023 அன்று, அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia