மெரினா (திரைப்படம்)
மெரினா, 2012 இல் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். பாண்டிராஜ் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும் அவருடன் இணைந்து ஓவியாவும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 2012 பெப்ரவரி 3 அன்று வெளியானது. இத்திரைப்படம் பல கலப்பு விமர்சனங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.[2][3][4][5][6] கதைச்சுருக்கம்தனது கொடுமைக்கார மாமாவிடம் இருந்து தப்பி வரும் அம்பிகாபதி (பக்கோடா பாண்டியன்) இறுதியில் சென்னை மெரினா கடற்கரையை வந்தடைகிறான். அங்கு தனது வயிற்றுப் பிழைப்புக்காகத் தண்ணீர் பைகள் விற்கும் தொழிலை மேற்கொள்கிறான். பின்னர் சுண்டல் விற்கும் தொழிலையும் மேற்கொள்கிறான். இவ்வாறு வாழும் அம்பிகாபதிக்கு மெரினா கடற்கரை பல நட்பு வட்டாரங்களை அளிக்கிறது. அம்பிகாபதியின் கனவு படிக்க வேண்டும் என்பதாகும். தனது ஓய்வு நேரங்களில் படிக்கவும் செய்தான். அவனது ஆசை மெரினா கடற்கரையில் உள்ள தனது நண்பர்களுடன் பாடசாலையில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பதாகும். மெரினா கடற்கரை பல காதல் ஜோடிகளுக்கும் அடைக்கலம் கொடுத்தது. அவ்வாறான ஒரு காதல் ஜோடியே செந்தில் நாதன் (சிவகார்த்திகேயன்) மற்றும் சொப்பன சுந்தரி (ஓவியா) ஆகியோர். நடிகர்கள்
வெளியீடுஇத்திரைப்படத்தின் செயற்கை கோள் வெளியீட்டு உரிமையை ஸ்டார் விஜய் தொலைக்காட்சி பெற்றமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு இத்திரைப்படத்திற்கு இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு யூ சான்றிதழ் வழங்கியிருந்தது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia