மேலச்சேரி ஊராட்சி
மேலச்சேரி ஊராட்சி (Melachari Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, செஞ்சி சட்டமன்றத் தொகுதிக்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2204 ஆகும். இவர்களில் பெண்கள் 1083 பேரும் ஆண்கள் 1121 பேரும் உள்ளனர். அடிப்படை வசதிகள்தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]
சிற்றூர்கள்இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:
கோவில்கள்இங்கு புகழ் பெற்ற, நூற்றாண்டு பழைமை வாய்ந்த அருள்மிகு மதலேசுவரர்(சிவன்) குடைவரை கோவில் உள்ளது. மதலேசுவரர் கோவிலுக்கு மேல் பாலமுருகன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூசம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலச்சேரியின் தென் பகுதி காடுகளால் சூழப்பட்டது. 1 கி.மீ தொலைவில் காட்டிற்குள் அருள்மிகு பச்சையம்மன் ஆலயம் உள்ளது. இங்கு ஆடி மாதம் முழுவதும் கோலாகலமாக இருக்கும். பல்லாயிர கணக்கநோருக்கு இந்த அம்மன் குலதெய்வமாகும். அடுத்து திரோபதி அம்மன் ஆலயம். பச்சைஅம்மன் ஆலயத்திற்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது. எங்கு துரோபதை அம்மன் கோவில் கட்டுவதாக இருந்தாலும் இந்த துரோபதை அம்மன் கோவில் மண் எடுதுச்சென்றே கோவிலுக்கு அடித்தளமிட்டு கட்டுவர். பொரிக்கு புகழ் பெற்ற ஊர். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia