மோசஸ் கிலாங்கின் பன்னாட்டு வானூர்தி நிலையம்
மோசஸ் கிலாங்கின் பன்னாட்டு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: TIM, ஐசிஏஓ: WAYY; WABP); (ஆங்கிலம்: Mozes Kilangin Airport (TIM); இந்தோனேசியம்: (Bandar Udara Mozes Kilangin) என்பது இந்தோனேசியா, மத்திய பப்புவா, மிமிக்கா பிராந்தியம் (Mimika Regency), திமிக்கா மாநகரில் அமைந்துள்ள ஒரு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்த வானூர்தி நிலையம் 1969-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கட்டப்பட்டு 1971-இல் திறக்கப்பட்டது. இது உள்நாட்டு வானூர்திகளுக்கு மட்டுமே சேவை செய்கிறது. வரலாறுஇந்த வானூர்தி நிலையத்தில், 1996 ஏப்ரல் 15 அன்று கோபசஸ் (Komando Pasukan Khusus) எனும் சிறப்பு இராணுவப் படை பிரிவைச் சேர்ந்த லெப்டினன்ட் சனூரிப் (Sec. Lt. Sanurip) என்பவரால் ஒரு பெரிய அளவிலான துப்பாக்கிச் சூடு (1996 Timika shooting) நடத்தப்பட்டது. அந்தத் துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் கொல்லப்பட்டனர்; மற்றும் 11 பேர் காயமடைந்தனர்.[1][2] மெர்பாத்தி நுசந்தராசூலை 18, 2008 அன்று, இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சர் ஜுசுமான் சியாபி ஜமால், மோசஸ் கிலாங்கின் வானூர்தி நிலையத்தை பன்னாட்டு வானூர்தி நிலையமாக மேம்படுத்தும் பணியைத் தொடக்கி வைத்தார்.[3] அக்டோபர் 9, 2008 அன்று, காலை 10:00 மணியளவில், மெர்பாத்தி நுசந்தரா ஏர்லைன்ஸ் (Merpati Nusantara Airlines) வானூர்தி MZ-835, ஜெயபுராவில் இருந்து பியாக் மற்றும் மக்காசார் வழியாக ஜகார்த்தாவிற்கு செல்லும் வழியில், மோசஸ் கிலாங்கின் வானூர்தி நிலையத்தில் தரையிறங்கும் போது, வானூர்தியின் சக்கரம் வெடித்தது. இந்த நிகழ்வில் எவரும் காயமடையவில்லை. காட்சியகம்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia