ராஜமகுடம்

ராஜ மகுடம்
இயக்கம்பி. என். ரெட்டி
தயாரிப்புபி. என். ரெட்டி
வாகினி புரொடக்ஷன்ஸ்
கதைடி. வி. நரசராஜு
இசைமாஸ்டர் வேணு
நடிப்புஎன். டி. ராமராவ்
வி. ஆர். ராஜகோபாலன்
நாகைய்யா
எஸ். வி. சகஸ்ரநாமம்
பாலாஜி
ராஜசுலோச்சனா
கண்ணாம்பா
வெளியீடுபெப்ரவரி 25, 1960
ஓட்டம்.
நீளம்16568 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராஜ மகுடம் (Raja Makutam) 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. என். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ், வி. ஆர். ராஜகோபாலன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2]

கதைச் சுருக்கம்

காந்தார நாட்டில் விழா நாள். மன்னர் மகாராணியுடன் அரண்மனை நந்தவனத்தில் அமர்ந்து வாண வேடிக்கையும். நடனங்களையும் கண்டு களித்துக் கொண்டிருக்கிறார். திடீரென்று ஒரு கைவாள் வந்து மன்னர் மார்பில் பாய்கிறது. மன்னர் தரைமேல் சாய்கிறார். அவருடைய மகுடம் படிமேல் உருளுகிறது.

இளவரசன் பிராதபா சிம்மன் நாட்டுக்கு வெளியே குரு குலத்திலிருக்கிறான். தந்தையின் மரணச்செய்தி அவனுக்கு எட்டுகிறது அவசாமாகப் புறப்பட்டு வருகிறான்.

இறந்துபோன மன்னரின் தம்பி பிரசண்டன் தான் நாட்டின் சேனாதிபதி, அவன் மன்னர் கொலைக்காக என்று வாண்மனையிலிருந்த ராஜ பக்தர்களை யெல்லாம் பிடித்துக் சிறைப்படுத்தி விடுகிறான்.

நாட்டுக்கு வரும் வழியில் பிரதாபனையும சிலர் தாக்குகிறார்கள். அவன் அவர்களை யெல்லாம் ஒழித்துவிடுகிறான். ஆயினும் அவன் காயம்பட்டு மெய்மறந்து சாலை ஓரத்தில் கிடக்கிறான்.

பிரமீளா ஒரு கிராமத்துப் பெண் அவளுடைய அண்ணனுக்கு அரண்மனையில் வேலை. அவனைப் பார்க்க வண்டி கட்டிக் கொண்டு வருகிறாள். வழியில் நினைவு இழந்து கிடக்கும் பிரதாபனைக் கண்டு உதவி செய்கிறாள், பிரதாபன் தான் இளவரசன் என்பதை மறைத்து யாரோ நாடோடி என்று சொல்லுகிறான்.

பிரகாபன் அரண்மனைக்குப்போய்ச் சேர்ந்தவுடன் நாட்டின் முதல் மந்திரியை யாரோ கொலை செய்து விட்டதாகச் செய்தி எட்டுகிறது. அந்தப்படபடப்பில் அவன் பிரசண்டனிடம் சிறைப்படுத்தப்பட்ட எல்லோரையும் கொன்று விடும்படி உத்தரவிடுகிறான்.

எல்லோருக்கும் பதிரங்கமாக மரண தண்டனை நிறைவேற்றப் படுகிறது. இளவரசர் ஆணையின்படி என்று அறிவிக்கப்படுகிறது. தண்டனை அடைந்தவர்களில் பிரமீளாவின் அண்ணனும் ஓருவன் தன் அண்ணனை விசாரணை கூட இல்லாமல் அநியாயமாகக் கொன்ற இளவரசன் பிரதாபனைப் பழிவாங்குவதாக சபதம் செய்கிறாள் பிரமீளா.

அந்த சமயத்தில் பிரதாபன் தன் தந்தையையும், முதல்மந்திரியையும் கொலை செய்வித்தது தன் சிற்றப்பா பிரசண்டன் தான் என்ற உண்மையை அறிகிறான். உடனே பிரசண்டனை எதிர்த்து ஒழிக்கத்துடிக்கிறான். ஆனல் அவன் தாய், மகாராணி அவனைத் தடுத்து நிலைமையை விளக்குகிறாள். நாட்டின் படைபலம் முழுவதும் பிரசண்டன் கையில், அரண்மனை அவன் வசம் அதுமட்டுமல்ல இளவரசன் பெயரால் பல அப்பாவிகளுக்கு மரண தண்டனை நடத்தி மக்களையும் பிரதாபனுக்குப் பகைவர்களாக்கி சூழ்ச்சி செய்து விட்டான். பின்னர் என்னாகிறது என்பது மீதிக் கதை.

பாடல்கள்

திரைப்படத்துக்கு இசையமைத்தவர் மாஸ்டர் வேணு. பாடல்களை தஞ்சை ராமையாதாஸ் இயற்றினார்.[3] திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன், ஏ. எல். ராகவன், பி. லீலா, ஜிக்கி ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[4]

எண். பாடல் பாடியவர்/கள் கால அளவு
1 மாடப்புறாவே ஓடி வருவாயா பி. லீலா 02:31
2 கொஞ்சி வரும் தென்றலே
3 அம்பா ஜெகதம்பா
4 முன்னாலே போவணும் திரும்பலாமா சீர்காழி கோவிந்தராஜன்
5 இரவினில் வந்ததேனோ.... ஊரேது பேரேது வெண்ணிலாவே சீர்காழி கோவிந்தராஜன் & பி. லீலா 04:31
6 வச்ச புள்ளியும் தவறாது ஜிக்கி
7 கும்தல கும்மா 03:28
8 வாருங்கோ வாருங்கோ வாருங்கோ திருச்சி லோகநாதன்
9 கேளாயோ கதையை நீ ஏ. எல். ராகவன்

மேற்கோள்கள்

  1. Narasimhan, M. L. (11 February 2016). "Rajamakutam (1960)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 12 March 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170312013711/http://www.thehindu.com/features/friday-review/starring-nt-ramarao-rajasulochana-kannamba-gummadi-padmanabham-rajanala/article8223231.ece. 
  2. "1960 – ராஜமகுடம் – வாஹினி புரொடக். . ராஜமகுடம்(தெ)" [1960 – Raja Makutam – Vauhini Produc. . Raja Makutam(te)]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 12 March 2017. Retrieved 12 March 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. Neelamegam, G. (2016). Thiraikalanjiyam – Part 2 (in Tamil) (1st ed.). Chennai: Manivasagar Publishers. p. 212.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  4. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (Ph:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. p. 212.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya