ருத்ரமாதேவி (திரைப்படம்)
ருத்ரமாதேவி (Rudhramadevi) என்பது 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தெலுங்குத் திரைப்படம் ஆகும். முப்பரிமாணத்தில் வெளிவந்த இவ்வரலாற்றுப் படம் தக்காணப் பீடபூமியில் காக்கத்தியப் பேரரசியான ருத்திரமாதேவியின் வாழ்க்கையை மையப்படுத்தித் தயாரிக்கப்பட்டது.[3][4] குணசேகரின் இயக்கத்தில் அனுசுக்கா செட்டி ருத்ரமாதேவியாக நடித்துள்ளார்.[5] இவருடன் அல்லு அர்ஜுன், ரானா தக்குபாடி, பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், காத்ரீன் திரீசா மற்றும் பலரும் நடித்தனர். திரைப்படத்தில் கதை சொல்லியாக சிரஞ்சீவி நடித்துள்ளார்.[6] திரைப்படத்தின் பின்னணி இசையையும், பாடல்களையும் இளையராஜா வழங்கியுள்ளார்.[7] ருத்ரமாதேவி உலகளாவிய அளவில் 2015 அக்டோபர் 9 இல் தெலுங்கிலும், இந்தி, மற்றும் மலையாள மொழிகளிலும் வெளியிடப்பட்டது. தமிழில் 2015 அக்டோபர் 16 இல் வெளியிடப்பட்டது.[8][9] திரைப்படத்தில் அனுஷ்காவின் நடிப்பு, பின்னணி இசை, விவரணம் போன்ற அம்சங்கள் விமரிசகர்களின் பாராட்டைப் பெற்றது. 2015 ஆம் ஆண்டில் வெளியான இந்தியத் திரைப்படங்களில் முதல் நாள் வசூலில் இத்திரைப்படம் ஐந்தாவதாக வந்து சாதனை படைந்தது.[10][11][12] ஆரம்ப வார இறுதியில் ₹32 கோடிகள் உலகளவில் வசூலிக்கப்பட்டது.[13][14][15] நடிகர்கள்
மேற்கோள்கள்
வெ:ளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia