ரொட்ரிகோ துதெர்த்தே
ரொட்ரிகோ ரோடி ரோவா துதெர்த்தே (Rodrigo "Rody" Roa Duterte[2], பிறப்பு மார்ச் 28, 1945), விளிப்பெயர் டிகொங், ஒரு பிலிப்பீனிய வழக்கறிஞர், அரசியல்வாதி மற்றும் பிலிப்பைன்ஸின் 16 வது ஜனாதிபதி ஆவார். அவர் பிலிப்பைன்ஸின் வரலாற்றில் நீண்ட காலம் பணியாற்றிய மாநகரத்தலைவர்களில் ஒருவர். அவர் 22 வருடங்களுக்கும் மேலாக 1,449,296 மக்கள்தொகை கொண்ட மிண்டானாவோ மாகாணத்தின் டவாவோ நகரத்தின் மாநகரத்தலைவராக பணியாற்றினார். அவர் முன்பு துணை மாநகரத்தலைவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். குற்றவாளிகளுக்கு எதிரான கடுமையான கொள்கைகளுக்காக (சூன்ய சகிப்பு) உள்ளூரில் இவர் பெரிதும் புகழ் பெற்றுள்ளார். டைம் இதழ் இவரை "தண்டிப்பவர்" என பெயரிட்டுள்ளது. துதெர்த்தெயுடன் தொடர்புள்ள காப்புக்குழுக்கள் போதை மருந்து கையாளுபவர்கள், குற்றவாளிகள், கும்பல் உறுப்பினர்களு மற்றும் பிற சட்டவிரோத குழுக்களை தண்டனைக் கொலை செய்ததாக கருதப்படுகின்றது. இருபது ஆண்டுகளுக்கும் மேலான ஆட்சியில் துதெர்த்தெ டவாவோ நகரத்தை "பிலிப்பீன்சின் கொலைத் தலைநகரம்" என்பதிலிருந்து “தென்கிழக்காசியாவின் மிகவும் அமைதியான நகரமாக” மாற்றியுள்ளார்.[3][4][5] பிலிப்பீன்சு ஜனாதிபதியாகப் போட்டியிட பலமுறை வேண்டுகோள் விடப்பட்டும் [6] 2015 வரை தவறான அரசமைப்பு எனக் கூறியும் குடும்ப எதிர்ப்பு காரணமாகவும் துதெர்த்தெ செவிமடுக்கவில்லை.[7] இருப்பினும், நவம்பர் 21, 2015இல் 2016ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார்.[8] அவர் ஜனாதிபதி தேர்தலில் 39.01% வாக்குகளுடன் வெற்றி பெற்றார் [9], அவரது துணை ஜனாதிபதி வேட்பாளர் வெற்றிபெறவில்லை, எனவே லிபரல் கட்சியின் லெனி ராப்ரெடோ துணை ஜனாதிபதியானார். அக்டோபர் 2021 இல், ரோட்ரிகோ டுடெர்டே 2022 இல் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடவில்லை என்றும் அரசியல் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார்.[10] மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia