லங்கா பிரிமியர் லீக்
லங்கா பிரிமியர் லீக் (Lanka Premier League, எல்.பி.எம், LPL, சிங்களம்: ලංකා ප්රිමියර් ලීග් என்பது இலங்கையில் ஆண்டுதோறும் விளையாடப்படும் தொழில்முறை இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடர் ஆகும். இத்தொடர் இலங்கை நகரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகளால் 2020 ஆம் ஆண்டு முதல் விளையாடப்பட்டு வருகின்றது.[1][2] இக்கூட்டமைப்பு இலங்கைத் துடுப்பாட்ட வாரியத்தால் 2018 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.[3] ஆகத்து 2020 இல் இத்தொடரின் இயக்குநராக ரவீன் விக்கிரமரத்தின நியமிக்கப்பட்டார்.[4] வரலாறுபின்னணிமுதல் பருவப் போட்டித் தொடர் முதலில் 2020 ஆகத்து 18 முதல் செப்டம்பர் 10 வரை நடைபெறவிருந்தது,[5][6][7] ஆனால் துடுப்பாட்ட வாரியத்தினுள் நிலவிய பல நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக இத்தொடர் பல முறை ஒத்திவைக்கப்பட்டது.[8][9][10] 2020 சூன் மாதத்தில், கோவிட்-19 பெருந்தொற்றின் மத்தியில், இத்தொடர் 2020 ஆகத்து 28 இல் தொடங்கும் என இலங்கைத் துடுப்பாட்ட வாரியம் அறிவித்தது.[11][12] 70 வெளிநாட்டு வீரர்கள் இத்தொடரில் விளையாடுவதில் ஆர்வம் காட்டினர்.[13] கோவிடு-19 தொற்றுக்கான கட்டுப்பாடுகள் காரணமாக பல முறை மாற்றியமைக்கப்பட்ட பின்னர், முதல் பருவம் 2020 நவம்பர் 26 அன்று தொடங்கியது. அணிகள்லங்கா பிரிமியர் லீக் அணிகள்
ஒலிபரப்புசோனி பிக்சர்சு நெட்வர்க்சு, இசுக்கை இசுபோர்ட்சு, பாக்கித்தான் டெலிவிசன் கார்ப்பரேசன் ஆகிய நிறுவனங்கள் 2020 எல்.பி.எல் தொடரை ஒலி, ஒளிபரப்புவதற்கான உரிமங்களை வென்றன. இலங்கையில் உள்ளூர் ஒலிபரப்பு உரிமையை ஐ.ரி.என் நிறுவனம் வென்றது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia