வசந்தத்தில் ஓர் நாள்
வசந்தத்தில் ஓர் நாள் (Vasandhathil Or Naal) என்பது 1982 ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்பபடமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கிய இப்படத்தை எஸ். ரங்கராஜன் தயாரித்தார். இதில் சிவாஜி கணேசன், ஸ்ரீபிரியா ஆகியோர் நடித்தனர்.[1] இது 1975-ஆம் ஆண்டு வெளியான இந்தி படமான மௌசம் படத்தின் மறு ஆக்கமாகும். இப்படம் 1982-ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் நாள் வெளியானது. கதைராஜசேகரன் கிராமத்திற்குச் செல்லும்போது அங்கு ராஜி என்ற பெண்ணைச் சந்திக்கிறார். இருவரும் காதலிக்கின்றனர். ஊருக்குச் சென்று தன் பெற்றோரின் ஒப்புதலுடன் அவளைத் திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்துச் செல்கிறார். இருப்பினும், சூழ்நிலை காரணமாக அவரால் தனது வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போகிறது. ஆண்டுகள் கடந்து செல்கின்றன. அவள் வேறொருவரை மணந்துகொண்டு அமைதியான வாழ்க்கை வாழ்வாள் என்ற நம்பிக்கையுடன் ராஜசேகரன் இருக்கிறார். ஆனால் தற்செயலாக அவளை ஒரு பாலுறவு விடுதியில் சந்திக்கும்போது அவரது நம்பிக்கை உடைகிறது. அங்கு பார்த்த பெண் ராஜி அல்ல, ராஜியின் மகள் நீலா என்று தெரிய வருகிறது. அவர் அவளைப் பாலுறவு விடுதியில் இருந்து தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று சீர்திருத்த முயல்கிறார். ராஜி ஒரு ஊனமுற்ற முதியவரைத் திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்தப்பட்டு அவளது மாமனால் பாலியல் வல்லுறவு செய்யப்படுகிறாள். நீலா பிறந்த பிறகு மனநிலை குன்றி இறக்கிறாள். பின்னர் நீலா ஒரு பாலுறவு விடுதிக்கு விற்கப்பட்டாள் என்பது தெரியவருகிறது. ராஜசேகரன் குற்ற உணர்ச்சியுடன் அவளை மீட்க பாடுபடுகிறார். நீலா இதைக் காதல் என்று தவறாக நினைக்கிறாள். இதன் பிறகு ராஜசேகரன் முழு உண்மையையும் சொல்கிறார். இதனால் ராஜசேகரனை வெறுத்து நீலா தப்பி ஓடுகிறாள். அவள் ராஜசேகரனைப் புரிந்து கொண்டாளா? அவள் வாழ்வு என்ன ஆனது? என்பதே மீதிக் கதையாகும். நடிகர்கள்
பாடல்கள்இப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைக்க, பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதினார்.[2]
வெளியீடும் வரவேற்பும்வசந்தத்தில் ஓர் நாள் 1982 மே 7 அன்று வெளியானது.[3] மிட் டேயின் எஸ். சிவக்குமார் ஸ்ரீபிரியாவின் "குறிப்பிடத்தக்க நடிப்புக்காக" பாராட்டினார். கல்கியின் மஞ்சுளா ரமேஷ் இந்த கனமற்ற கதைக்களத்தில் சிவாஜியும், ஸ்ரீப்ரியாவும் வீணடிக்கப்பட்டார்கள் எனக் கருதினார். ஆனால், இசையையும் பாடல்களையும் பாராட்டினர்.[4] நியூ சண்டே டைம்சுக்கு எழுதிய எஸ். ஜெயகிருஷ்ணன், சிவாஜி கணேசன், ஸ்ரீப்ரியா ஆகியோரின் நடிப்பைப் பாராட்டினார். ஒளிப்பதிவு போன்ற தொழில்நுட்ப அம்சங்களைப் பாராட்டும் அதே வேளையில், "திரைப்படத்தை அதன் ஆரம்ப கட்டங்களில் தடுமாறச் செய்ததற்காக" இயக்குநரை விமர்சித்தார். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia