ஏ. சி. திருலோகச்சந்தர்
ஆற்காடு செங்கல்வராய முதலியார் திருலோகச்சந்தர் (பரவலாக ஆ. செ. திருலோகச்சந்தர் (A. C. Tirulokachandar, 11 சூன் 1930 – 15 சூன் 2016) தமிழகத் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் புகழ்பெற்ற பல தமிழ்த் திரைப்படங்களையும், சில இந்தி, தெலுங்குப் படங்களையும் இயக்கியுள்ளார்.[2][3] மேலும் இவர் 1966 இல் இயக்கிய ஏவிஎம்மின் முதல் வண்ண திரைப்படமான அன்பே வா திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் அன்றைய முன்னணி நடிகரான மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் நடிப்பை புதிய பறிமாற்றத்தில் முழுநீள காதல் திரைப்படமாக இயக்கி புகழ் பெற்றார். அதே போல் 1969 இல் இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வைத்து மூன்று மாறுபட்ட கதாபாத்திரங்களில் இயக்கிய தெய்வமகன் திரைப்படம் ஆசுக்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதலாவது தென்னிந்திய தமிழ் திரைப்படமாகும்.[4][5] வாழ்க்கை குறிப்புஏ. சி. திருலோகச்சந்தர் அன்றைய வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் செங்கல்வரயான் முதலியார்–நாகபூஷ்ணம் அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். முதுகலை வரை பட்டப்படிப்பை முடித்தவர். திரையுலகில்திரையுலகில் அவரது நண்பர் ராஜகோபாலின் தந்தை ஆர். பத்மநாபன் இயக்கிய குமாரி திரைப்படத்தின் மூலம் கதை வசனம் திருத்தம் செய்யும் வேலையுடன் அப்படத்தின் கதாநாயகன் எம். ஜி. ஆர் உடன் பழகும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. அதன் பிறகு வீணை எஸ். பாலசந்தர் உடன் உதவி இயக்குநராகப் பணிபுரியும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. சி. எல். ஆனந்தன் கதாநாயகனாக நடித்த விஜயபுரி வீரன் திரைப்படத்தில் உதவி இயக்குநராகவும், கதாசிரியராகவும் பணியாற்றிய பிறகு அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏ. வி. மெய்யப்பச் செட்டியார் ஆனந்தனைக் கதாநாயகனாக வைத்து ஏ. சி. திருலோகச்சந்தரை முதல் முறையாக இயக்குநராக மாற்றி தனது ஏவிஎம் நிறுவனம் வாயிலாக வீரத்திருமகன் திரைப்படத்தை வெளியிட்டார்.[6] அதன் பிறகான காலகட்டத்தில் ஏவிஎம் நிறுவனத்தில் திருலோகச்சந்தர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழித் திரைப்படங்களை அந்நிறுவனத்தின் சார்பில் இயக்கி வெளியிட்டார். அதன் பின்னர் ஏவிஎம் மூலம் ஏ. பீம்சிங் இயக்கத்தில் உருவான பார்த்தால் பசி தீரும் திரைப்படத்தில் கதை வசனகர்த்தாவாக பணியாற்றினாலும் வீரத்திருமகன், நானும் ஒரு பெண், காக்கும் கரங்கள், ராமு, அன்பே வா, அதே கண்கள், எங்க மாமா (தயாரிப்பு), பாபு (தயாரிப்பு) போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். சிவகுமாரை தனது காக்கும் கரங்கள் திரைப்படம் மூலம் அறிமுகப்படுத்தினார். 1966 இல் அன்பே வா திரைப்படத்தை காஷ்மீர் சிம்லா, ஊட்டி போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு சென்று எம்ஜிஆரின் நடிப்பில் ஏவிஎம்-மின் முதல் வண்ண திரைப்படமாக வெளியிட்டார். அதன் பிறகு திருலோகச்சந்தர் தனது நண்பர் கே. பாலாஜியின் சொந்த படத்தயாரிப்பு நிறுவனமான 'சுஜாதா பிக்சர்ஸ்' சார்பில் தங்கை திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக சிவாஜி கணேசனை வைத்து இயக்கும் வாய்ப்பினை பெற்றார். தங்கையின் வெற்றிக்கு பிறகு கே. பாலாஜி தயாரித்த என் தம்பி, திருடன், எங்கிருந்தோ வந்தாள் போன்ற திரைப்படங்களை இயக்கி சாதனை படைத்தார். சிவாஜி கணேசனின் சொந்த படத்தயாரிப்பு நிறுவனங்களான "கமலா மூவிஸ்", "சாந்தி பிலிம்ஸ்" சார்பில் அன்பளிப்பு, தெய்வமகன், தர்மம் எங்கே போன்ற திரைப்படங்களை இயக்கினார். இயக்கி தயாரித்த தமிழ் திரைப்படங்கள்
கதை & வசனம் மற்றும் உதவி இயக்கம்
மறைவுதிருலோகச்சந்தர் 2016 சூன் 15 அன்று தனது 86-ஆவது அகவையில் சென்னையில் காலமானார்.[7] இவருக்கு மல்லி சீனிவாசன் என்ற மகளும், ராஜ்சந்தர் என்ற மகனும் உள்ளனர். இவரது இறப்பிற்கு சில நாட்களுக்கு முன்னர் இவரது இன்னொரு மகன் பிரேம் திரிலோக் அமெரிக்காவில் காலமானார்.[8] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia