முகம்மதலி சிகாப் தங்ஙள் (Syed Muhammedali Shihab Thangal, 4 மே 1936 - 1 ஆகத்து 2009), என்பவர் இந்தியச் சமூகத் தலைவரும், இஸ்லாமிய அறிஞரும், கேரளாவைச் சேர்ந்த அரசியல்வாதியும் ஆவார்.[2][3] இவர் நவீன கேரளாவின் மிக முக்கியமான "மாப்பிளமார் தலைவர்" என்றும் கருதப்படுகிறார்.[4] சிகாப் தங்ஙள் இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்கின் (1975 - 2009) கேரள மாநிலக் குழுவின் தலைவராகவும் செயல்பட்டார்.[5][2] இவர் யெமன் வம்சாவளியைச் சேர்ந்த தங்ஙள் என்ற கேரளாவில் உள்ள ஓர் இசுலாமியச் சமூகத்தில் பிறந்தார்.[6] இவர் கேரள மாநில இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்கின் தலைவராக 1975 முதல் 2009 வரை செயல்பட்டார்.
இளமை மற்றும் கல்வி
மே 4, 1936 அன்று பி. எம். எஸ். ஏ. புக்கோயா தங்ஙளில் மூத்த மகனாகப் பிறந்தார்.[7][8] இவருடன் உடன்பிறந்தவர்கள் உமேரலி சிகாப் தங்ஙள், கைதரலி சிகாப் தங்ஙள், சாதிக் அலி சிகாப் தங்ஙள் மற்றும் அப்பாசாலி சிகாப் தங்ஙள்.[9] இவர் தனது ஆரம்பக் கல்வியை பானக்காட்டில் உள்ள பள்ளியிலும், தனது உயர்நிலைக்கல்வியை கோழிக்கோட்டில் உள்ள எம். எம். உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார்.[10][8] இவர் தனது ஆரம்ப இசுலாமியக் கல்வியை திரூர் மற்றும் மல்லபுரத்திலுள்ள கானஞ்சேரியிலும் பாரம்பரிய மதராசாக்களிலும் கற்றார்.[8][11]
தங்ஙள், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் நன்கு புலமை பெற்றவர்.[12] இவர் சூபி-கவிதைகள் மீதான ஆர்வத்திற்காகவும் அறியப்பட்டார்.[13] கேரளாவுக்குத் திரும்பிய பின்பு சையத் பாபாக்கி தங்ஙளின் மகளான சரீபா பாத்திமா பீவியை மணந்தார்.[10]
பொது வாழ்க்கை
1975-ல் இவரது தந்தையின் மறைவுக்குப் பிறகு கேரள மாநிலக் இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் குழுவின் தலைவரானார்.[14][15] 1992-ல் பாபர் மசூதி இடிப்பு போன்ற மிகவும் பதட்டமான காலங்களில் கேரளாவில் மத நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் ஆற்றிய பங்கிற்காக நினைவுகூரப்படுகிறார்.[2][12]
2010ஆம் ஆண்டின் இந்திய தபால் தலையில் முகமதிலி சகாப் தங்ஙள்
சிகாப் தங்ஙள் 1 ஆகத்து 2009 அன்று மாரடைப்பால் மரணமடைந்தார்.[11]