வல்லாள மகாராசன் கதைவல்லாள மகாராசன் கதை பாடியவர் ‘அருணாசல கீர்த்தனை’ பாடிய காஞ்சிபுரம் வீராணப் புலவர். ‘வல்லாள மகாராஜா சருக்கம் என இந்தக் கதை16ஆம் நூற்றாண்டை சேர்ந்த சைவ எல்லப்ப நாவலரின் ‘அருணாசல புராணம்’ நூலிலும் உள்ளது.[1] காலம்இந்நூலின் காலம் பொ.ஊ. 16ஆம்நூற்றாண்டு ஆகும். [2] கதைவல்லாள மகாராசன் திருவண்ணாமலையில் இருந்துகொண்டு ஆட்சிபுரிந்துவந்தான். மகப்பேறு இல்லாமல் கவலையுற்றிருந்தான். கவலையைப் போக்க அறம் செய்ய விரும்பிய அவன் தன்னிடமுள்ள எதனையும் யார் வேண்டுமானாலும் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம் என முரசறைந்து தெரிவித்தான். சிவபெருமான் அவனுக்கு அருள்புரிய விரும்பி ஒரு சங்கமர் (சைவத் துறவி) கோலத்தில் அவனிடம் வந்தார். சிற்றின்பம் நுகரத் தனக்கு ஒரு பெண் வேண்டும் என்று கேட்டார். அரசன் கணிகையரை அழைத்துவர ஆணையிட்டான். அப்போது கணிகையரின் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு சங்கமர் இருந்தனர். எனவே யாரையும் அழைத்துவர முடியவில்லை. அரசன் வருந்தினான். அப்போது அரசனின் இளைய மனைவி எல்லம்மா தேவி சங்கமர் கருத்துக்குத் தான் இசைவதாக வந்து சங்கமரைத் தொட்டாள். சங்கமர் குழந்தையாக மாறிவிட்டார். அரசனும் மனைவியும் குழந்தை அழகைப் பார்த்து மகிழ்ந்தனர். அப்போது குழந்தை மறைந்தது. வானத்தில் காளைமாட்டின்மேல் சிவன் காட்சி தந்தார். வல்லாளன் இறுதிக் காலத்தில் அவனுக்குப் புத்திரனாக வந்து சடங்குகள் செய்து அரசனுக்கு முத்தி அளித்தார். கதைக்குக் கால்
மேலும் கதை
ஒப்புமைக்கதைகள்
கருவிநூல்
இவற்றையும் பார்க்கஅடிக்குறிப்பு |
Portal di Ensiklopedia Dunia