வளைதடிப் பந்தாட்ட உலகத் தொடர்
வளைதடிப் பந்தாட்ட உலகத் தொடர் (World Series Hockey , WSH) இந்தியாவில் நடத்தப்படும் தொழில்முறை வளைதடிப் பந்தாட்ட கூட்டிணைவு போட்டியாகும். இதனை இந்திய வளைதடிப்பந்தாட்டக் கூட்டமைப்பும் நிம்பசு இசுபோர்ட்சும் இணைந்து நடத்துகின்றன. இந்தியாவில் வளைதடிப் பந்தாட்டத்திற்கான ஆர்வத்தை தூண்டுவதே இதன் குறிக்கோளாகும். உரிமை வழங்கப்பட்ட எட்டு அணிகள் இதில் பங்கேற்கின்றன. இந்திய தேசிய அணியிலிருந்தும் வெளிநாட்டு அணிகளிலிருந்தும் விளையாட்டு வீரர்கள் இந்த அணிகளில் விளையாடுகின்றனர். பன்னாட்டு வளைதடிப் பந்தாட்ட கூட்டமைப்பில் உறுப்பினராகவுள்ள ஆத்திரேலியாவின் டென்னிசு மெரெடித் இதன் தொழினுட்ப இயக்குநராக உள்ளார்.[1] இந்தப் போட்டிக்கு தற்போது வட்டகை தயாரிப்பாளர்களான பிரிட்ச்சுச்டோன் புரவணைப்பைத் தருவதால் இந்தப் போட்டி அலுவல்முறையில் பிரிட்ச்சுச்டோன் வளைதடிப்பந்தாட்ட உலகத் தொடர் என்றழைக்கப்படுகின்றது.[2] 2012ஆம் ஆண்டு நடந்த துவக்கப் போட்டியில் சேர்-இ-பஞ்சாப் கோப்பையை வென்றது; இறுதியாட்டத்தில் பஞ்சாப் அணி புனே இசுட்ரைக்கர்சு அணியை 5-2 கோல்கணக்கில் வென்றது. கூகுளிலும் யூடியூப்பிலும் போட்டியின் அனைத்து ஆட்டங்களையும் நேரடி ஒளிப்பாய்ச்சிய (live stream) முதல் வளைதடிப் பந்தாட்ட போட்டியாக இது அமைந்தது.[3] இதன் இரண்டாம் பருவம் திசம்பர் 15, 2012 முதல் சனவரி 20, 2013 வரை நடந்தது.[4] மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia