வாழை (திரைப்படம்)
வாழை (Vaazhai) 2024இல் மாரி செல்வராஜ் எழுத்து, இணை தயாரிப்பு, இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். குழந்தைகள் தொடர்பான இந்நாடகத் திரைப்படத்தை டிசுனி + ஆட்சுடார், நவ்வி சுடுடியோசு, பாஃர்மர்சு மாசுடர் பிளான் புரொடக்சன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.[2] இப்படத்தில் அறிமுக நடிகர்கள் பொன்வேல் எம்., ராகுல் ஆர்., கலையரசன், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். மேலும் ஜே. சதீஷ் குமார், திவ்யா துரைசாமி, ஜானகி, நிவேதிதா இராஜப்பன் ஆகியோரும் நடித்திருந்தனர். செல்வராஜின் வாழ்க்கையை ஓரளவு அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படத்தில், பள்ளிக்குச் செல்லும் போது வாழைத் தோட்டத்தில் வேலை செய்கிறார். இருப்பினும், அங்கு வேலை செய்வதை அவர் வெறுக்கிறார். நவ்வி சுடுடியோவின் முதல் தயாரிப்பு என்பதால், தயாரிப்பு எண் 1 என்ற தற்காலிக தலைப்பில் இப்படம் நவம்பர் 2022 இல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதிகாரப்பூர்வ தலைப்பு சில நாட்களுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டது. முதன்மைப் புகைப்படம் எடுக்கும் நிகழ்வு அதே மாதத்தில் தொடங்கியது. இத்திரைப்படம் பெரும்பாலும் தூத்துக்குடியிலும் திருநெல்வேலியிலும் படமாக்கப்பட்டது. 2023 சனவரி மாதத்தின் நடுப்பகுதியில் முடிக்கப்பட்டது. இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். ஒளிப்பதிவை தேனி ஈஸ்வரும் படத்தொகுப்பை சூர்யா பிரதமானும் மேற்கொண்டனர்.[3][4][5] வாழை 2024 ஆகத்து 23 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[6][7] வெளியான பிறகு, மாரி செல்வராஜின் இயக்கம், முன்னணி நடிகர்களின் நடிப்பைப் பாராட்டி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[8] கதைச்சுருக்கம்1998 இன் நடுப்பகுதியில், தமிழ்நாட்டின் கருங்குளம் கிராமத்தில், வாழைப்பழத்தார்களை அறுவடை செய்து லாரிகளுக்கு கொண்டு செல்வதே முதன்மைத் தொழிலாக இருந்தது. இதற்காக ஒரு வாழைத்தாருக்கு ரூ. 1 என்ற சிறிய கட்டணம் செலுத்தப்படுகிறது. இளம்பருவ நண்பர்களான சிவனைந்தன், சேகர் ஆகியோர் முறையே இரஜினிகாந்த் கமல்ஹாசனின் தீவிர இரசிகர்களாவர். சிவனைந்தன் தனது சமூக அறிவியல் ஆசிரியரான பூங்கொடி மீது மோகம் கொண்டுள்ளார். மேலும் அவரது கைக்குட்டையைத் திருடியபின் பிடிபடும்போது பொய் சொல்கிறார். ஒரு புத்திசாலியான மாணவராக இருந்தபோதிலும், சிவனைந்தன் வறுமை காரணமாக வார இறுதி நாட்களில் வாழைப்பழத்தாருகளை இழுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அவரும் சேகரும் உழைப்பு மிகுந்த வேலைக்கு அஞ்சி அதைத் தவிர்க்க சாக்குப்போக்கு கேட்டனர். இருப்பினும், சிவனைந்தனின் தாயார், தனக்கு கிடைத்த முன்கூட்டியே வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேலை செய்ய வலியுறுத்தி தனது மகனின் உழைப்பை உறுதியளிக்கிறார். சிவனைந்தனின் மூத்த சகோதரியான வேம்பு, ஒரு பொதுவுடைமை சிந்தனையாளரான கனி என்பவரைக் காதலிக்கிறார். அவர் ஒரு சில கிராமவாசிகளுடன் சேர்ந்து, தங்கள் கிராமத் தரகர் முத்துராஜ் மூலம் வாழைத்தார் ஒன்றுக்கு ரூ. 1 கூடுதல் கட்டணத்தை கோருகிறார். வணிகர் தயக்கத்துடன் வேலை நிறுத்தத்தைத் தவிர்க்க ஒப்புக்கொள்கிறார். ஒரு வார இறுதியில், சிவனைந்தன் ஒரு முற்காயத்தை போலியாகக் காட்டி வேலையிலிருந்து தப்பிக்கிறார். இதனால் அவர் தங்கள் பசுவை கவனித்துக் கொள்ள அனுப்பப்படுகிறார். இருப்பினும், பசுவைக் கைவிட்டு பூங்கொடியுடன் அரிசி ஆலைக்குச் செல்கிறார். திரும்பி வந்ததும், முத்துராஜின் வயலுக்குள் பசு நுழைந்திருப்பதைக் காண்கிறார் அது மோதலுக்கு வழிவகுக்கிறது. கனி தலையிட்டு, சுமை சுமக்கும் தனது வேலையை இழக்கிறார். மற்ற கிராமவாசிகளைப் போலவே வாழைத்தார்களையும் இழுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அவமானமும் அவரது தாயின் கண்ணீரும் சிவனைந்தனை பத்து நாள் அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களில் கடன்களை அடைப்பதற்காகத் தயக்கமின்றி வேலை செய்வதாக உறுதியளிக்கத் தூண்டியது. சில மாதங்கள் கடந்து, சிவனைந்தனின் குடும்பம் அதிகரித்து வரும் கடன்களால் சிரமப்படுகிறது. அவரது தாயார் அவர்களின் பசுவை விற்கிறார். இது சிவனைந்தனை மேலும் வருத்தப்படுத்துகிறது. அவரது தாயாரின் உடல்நிலை மோசமடைவதால், சிவனைந்தன் வேலைக்குத் தள்ளப்படுகிறார். இதற்கிடையில், வரவிருக்கும் பள்ளியின் ஆண்டு விழாவுக்கான நடன நிகழ்ச்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார். இருப்பினும், அவரால் தனது தாயை எதிர்கொள்ள முடியவில்லை. நடனப் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக, வேலையில் விருப்பமின்றி, தனது சகோதரி வேம்புவை கட்டிப்பிடித்து, அவளை சமாதானப்படுத்தி, நெரிசலான லாரியில் இருந்து வெறும் வயிற்றுடன் தப்பிக்கிறார். உணவைத் தேடி, அருகிலுள்ள வயலில் இருந்து வாழைப்பழங்களை எடுக்க முயற்சிக்கிறார். ஆனால் வயலின் பராமரிப்பாளரால் பிடிக்கப்பட்டு மிருகத்தனமான தாக்குதலுக்கு ஆளாக்குகிறார். ஆனால், எப்படியோ தப்பிக்கிறார். வீடு திரும்பியதும், அவர் தனது தாயால் பிடிக்கப்பட்டு, அடித்து நொறுக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக, குளத்தின் அருகே ஓடி மயங்கி விழுகிறார். அவர் விழித்தெழும்போது, வாழைப்பழங்களை ஏற்றிச் செல்லும் போது லாரி விபத்தில் இறந்த வேம்பு, கனி, சேகர், முத்துராஜ் உள்ளிட்ட ஏறத்தாழ '19' சடலங்களுடன் முழுக் கிராமமும் துக்கத்தில் இருப்பதைக் காண்கிறார். அவ்வணிகர் முறையான போக்குவரத்தை வழங்க மறுத்ததால், தொழிலாளர்களை அதிக சுமை ஏற்றப்பட்ட லாரியில் ஏறக் கட்டாயப்படுத்தியதால், இச்சோகத்திற்கு காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. பலவீனமடைந்த, பசியுடனும் இருக்கும் சிவனைந்தன், சாப்பிட தனது வீட்டிற்குள் நுழைகிறார். ஆனால் அவரது தாயால் பிடிக்கப்படுகிறார். அவர் தனது பசிக்கு தன்னைக் குற்றம் சாட்டுகிறார். தனது மகளின் இழப்பு குறித்து வேதனைப்படுகிறார். ஆனால் பட்டினியால் வாடும் சிவனைந்தன் தப்பியோடி வாழை வயலில் மயக்கமடைந்து விழுகிறார். ஸ்ரீவைகுண்டம் அருகே வாழைப்பழங்கள் ஏற்றப்பட்ட லாரி கவிழ்ந்தபோது அதற்கு அடியில் உயிருடன் புதையுண்ட '20' வாழைப்பழ பண்ணைத் தொழிலாளர்கள் இறந்ததாக தினதந்தியில் இருந்து காப்பகப்படுத்தப்பட்ட செய்தித்தாள் கட்டுரையுடன் திரை வெட்டுகிறது. சம்பவத்தில் இருந்து தப்பிய ஒருவர் கூறியபடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு திரைப்படத்தை அர்ப்பணிக்கும் ஒரு குறிப்பு வருகிறது. [1] நடிகர்கள்
இசைஇத்திரைப்படத்தின் பின்னணி இசை, பாடல்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். பரியேறும் பெருமாள், கர்ணன் திரைப்படங்களுக்குப் பிறகு மாரி செல்வராஜுடன் மூன்றாவது தடவையாக இணைந்துள்ளார். "தென்கிழக்கு தேன் சிட்டு" என்ற தலைப்பில் முதல் தனிப்பாடல் 2024 சூலை 18 அன்று வெளியிடப்பட்டது.[9] இரண்டாவது தனிப்பாடலான "ஒரு ஊருல ராஜா" 2024 சூலை 29 அன்று வெளியிடப்பட்டது.[10] மூன்றாவது தனிப்பாடலான "ஒத்த சட்டி சோறு" 2024 ஆகத்து 5 அன்று வெளியிடப்பட்டது.[11] நான்காவது தனிப்பாடலான "பாதவத்தி" 2024 ஆகத்து 10 அன்று வெளியிடப்பட்டது.[12] பின்னர், படத்தின் இசை உரிமையை திங்க் மியூசிக் பெற்றதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.[13]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia