விக்கிரமங்கலம், அரியலூர்
விக்கிரமங்கலம்[2][3] என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். முதலாம் இராசேந்திர சோழன் காலத்தில் உருவாக்கப்பட்ட விக்கிரமங்கலம் கிராமமானது, விக்கிரமசோழபுரம் என்று அழைக்கப்பட்டது.[4] சோழ மன்னர்களின் துணை நகரமாகவும், வர்த்தக மற்றும் வாணிப மையமாகவும் திகழ்ந்துள்ளது.[5] அமைவிடம்கடல் மட்டத்திலிருந்து சுமார் 63.73 மீட்டர்கள் (209.1 அடி) உயரத்தில், (11°02′43″N 79°13′52″E / 11.0452°N 79.2310°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, அம்பாபூர் பகுதிக்கு அருகில் அமையப் பெற்றுள்ளது. கல்விஇவ்வூரில் நிறுவப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று, இவ்வூருக்கும் இதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் கல்வி சேவை செய்து வருகிறது.[6] சமயம்சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட சோழீசுவரர் கோயில்[7] என்ற சிவன் கோயில் ஒன்று விக்கிரமங்கலம் பகுதியில் சோழர்களின் வரலாற்றைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. இக்கோயிலின் மதில் சுவர் மற்றும் உட்புறப் பகுதிகளில் தீட்டப்பட்ட ஓவியங்கள் காலத்தால் அழிந்து கொண்டிருக்கின்றன.[8] சுப்பிரமணிய சுவாமி கோயில் என்ற முருகன் கோயில் ஒன்றும் இங்கு அமைந்துள்ளது. உசாத்துணைகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia