விருந்தோம்பல்![]() ![]() [3] விருந்தோம்பல் (Hospitality) என்பது ஒரு விருந்தினரை நேருக்குநேர் தொடர்புகொள்வதாகும். இதில் விருந்தினரை ஓரளவு நல்லெண்ணத்துடனும் வரவேற்புடனும் வரவேற்கப்படுகிறது. விருந்தினர்கள், பார்வையாளர்கள் அல்லது அந்நியர்களின் வரவேற்பு மற்றும் பொழுதுபோக்கும் இதில் அடங்கும். ஒரு பிரெஞ்சு அறிஞரும் மற்றும் பிரெஞ்சு கலைக்களஞ்சியத்திற்கு மிகவும் சிறந்த பங்களிப்பாளராக இருந்தவருமான லூயி, செவாலியர் டி ஜாக்கோர்ட் தனது கலைக்களஞ்சியத்தில் விருந்தோம்பலை மனிதகுலத்தின் உறவுகளின் மூலம் முழு பிரபஞ்சத்தையும் கவனிக்கும் ஒரு பெரிய ஆத்மாவின் நல்லொழுக்கம் என்று விவரிக்கிறார்.[4] விருந்தோம்பல் என்பது பிறரை நடத்தும் விதத்திலும் அடங்கும். எடுத்துக்காட்டாக விடுதிகளில் விருந்தினர்களை வரவேற்பது. ஒரு நிறுவனத்தின் விற்பனையின் அளவை அதிகரிப்பதில் அல்லது குறைப்பதில் விருந்தோம்பல் ஒரு முக்கியப் பங்கைக் கொண்டுள்ளது. விவிலியம் மற்றும் மத்திய கிழக்கில்![]() மத்திய கிழக்குக் கலாசாரத்தில், தம்மிடையே வாழும் அந்நியர்கள் மற்றும் வெளிநாட்டிரை கவனித்துக் கொள்வதானது ஒரு கலாசார விதிமுறையாகவே கருதப்பட்டது. பல விவிலிய ஆணைகளிலும் உதாரணங்களிலும் இத்தகைய விதிமுறைகள் வெளியாகின்றன.[5] வரலாற்று நடைமுறைபண்டைய கலாச்சாரங்களில், விருந்தோம்பல் என்பது அந்நியரை வரவேற்று அவர்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் பாதுகாப்பை வழங்குவதை உள்ளடக்கி இருந்தது.[6] உலகளாவிய கருத்துக்கள்அல்பேனியர்கள்அல்பேனியர்களிடையே, விருந்தோம்பல் என்பது அவர்களின் பாரம்பரிய இடம்பெறும் ஒன்று ஆகும். இது அல்பேனிய பாரம்பரிய சடங்குச் சட்டத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. விருந்தோம்பல், கௌரவம் மற்றும் பெசா ஆகியவை வடக்கு அல்பேனிய பழங்குடி சமூகத்தின் தூண்களாகக் கருதப்படுகிறது. ஏராளமான வெளிநாட்டு பார்வையாளர்கள் வரலாற்று ரீதியாக வடக்கு மற்றும் தெற்கு அல்பேனியர்களின் விருந்தோம்பலை ஆவணப்படுத்தியுள்ளனர். வெளிநாட்டு பயணிகள் மற்றும் இராஜதந்திரிகள், மற்றும் பல புகழ்பெற்ற வரலாற்றாசிரியர்கள் மற்றும் மானுடவியலாளர்கள், குறிப்பாக, வடக்கு அல்பேனிய மலைப்பகுதிகளின் விருந்தோம்பலை மிகவும் “புனிதப்படுத்தி, காதலாகி மற்றும் மகிமைப்படுத்தியுள்ளனர்”.[7] இரண்டாம் உலகப் போரின் போது இத்தாலிய மற்றும் ஜெர்மன் ஆக்கிரமிப்பின் போது யூதர்களுக்கு அவர்கள் ஏற்படுத்திய துன்பங்களுக்கு அல்பேனியர்கள் தங்கள் பாரம்பரிய விருந்தோம்பல் மற்றும் பெசாவைக் கடைப்பிடித்ததன் பிரதிபலிப்பு குறிப்பிடத்தக்க வகையில் கருதப்படுகிறது. உண்மையில், அல்பேனியாவில் மறைந்திருந்த யூதர்கள் அல்பேனியர்களால் காட்டிக்கொடுக்கப்படவில்லை அல்லது ஜெர்மனியர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. இதன் விளைவாக, இரண்டாம் உலகப் போரின் முடிவில் அல்பேனியாவில் தொடக்கத்தை விட பதினொரு மடங்கு அதிகமான யூதர்கள் இருந்தனர்.[8] பண்டைய கிரேக்கம்பண்டைய கிரேக்கர்கள் மற்றும் உரோமர்களுக்கு, விருந்தோம்பல் என்பது ஒரு தெய்வீக நிலையாக இருந்தது. தனது விருந்தாளிகளின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி விட்டனவா என்று உறுதி செய்து கொள்வது அவரது கடமையாக இருந்தது. அதே சமயம், விருந்தினர் ஒரு குறிப்பிட்ட நடத்தை விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பண்டைய கிரேக்கச் சொல்லான செனியா (இதுவே இறைவன் இதில் ஈடுபடுகையில் தியோக்செனியா என்னும் சொல்லானது) இவ்வாறு விருந்தாளி-நட்புச் சடங்கு உறவைச் சுட்டுவதாகும். இந்த உறவு ஓமரின் காவியங்களில், குறிப்பாக ஒடிசியில் குறிப்பிடப்பட்டுள்ளது.[9] கிரேக்க சமுதாயத்தில், விருந்தோம்பல் விதிகளை கடைப்பிடிக்கும் ஒரு நபரின் திறன் பிரபுத்துவத்தையும் சமூக நிலைப்பாட்டையும் தீர்மானிக்கிறது. ஓமரின் காலத்திலிருந்தே பண்டைய கிரேக்கர்கள், விருந்தோம்பல் மற்றும் அடுப்பின் தெய்வமாக எசிடியாவைக் கருதினர். இது பன்னிரு ஒலிம்பியர்களில் ஒன்றாகும். இந்தியாவும் நேபாளமும்உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் இந்திய நாகரிகமும் ஒன்று. தொன்மையான ஏனைய கலாசாரங்களைப் போலவே, விருந்தோம்பலையும் உள்ளிட்ட, பல அருமையன புனைவுகளை முறையில் இந்தியக் கலாசாரமும் கொண்டுள்ளது. இந்தியா மற்றும் நேபாளத்தில், குழந்தைகளாகத் தாம் இருந்த காலம் தொட்டே விருதினர்களை வரவேற்பது, அவர்களுக்கு உணவளிப்பது போன்ற பல கதைகளைக் கேட்டு வளரும் பெரும்பாலான இந்தியர்கள், விருந்தாளியே ஆண்டவன் எனப் பொருள்படும் “அதிதி தேவோ பவ” என்னும் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ளனர். இதிலிருந்தே இல்லத்திலும், சமூக நிகழ்வுகளிலும் விருந்தாளிகளின் பால் அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்ளும் இந்திய அணுகு முறையானது உருவானது.. நெறிமுறைகள் மற்றும் அறநெறி குறித்த பண்டைய இந்திய படைப்பான திருக்குறளில், 81 முதல் 90 வரையிலான அத்தியாயங்களில் விருந்தோம்பலின் நெறிமுறைகளை விளக்குகிறது.[10] யூத மதம்தொடக்க நூலில் (ஆதியாகமம் 18:1-8 மற்றும் 19:1-8 இல் ஆபிரகாம் மற்றும் லோத்தின் உதாரணங்களை அடிப்படையாகக் கொண்டு, அந்நியர்கள் மற்றும் விருந்தினர்களுக்கான விருந்தோம்பலை யூத மதம் பாராட்டுகிறது. எபிரேயத்தில், இந்த நடைமுறை "விருந்தினர்களை வரவேற்பது" என்ற பொருளில் அழைக்கப்படுகிறது. மற்ற எதிர்பார்ப்புகளைத் தவிர, புரவலர்கள் தங்கள் விருந்தினர்களுக்கு உணவு, ஆறுதல் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விருந்தோம்பலை வழங்குபவர்கள் தங்கள் விருந்தினரின் பாதுகாப்பான பயணத்தை விரும்புகிறார்கள். வழக்கமாக தங்கள் விருந்தினர்களை தங்கள் வீட்டிலிருந்து தாங்களே வெளியே அழைத்துச் செல்வார்கள்.[11][12] கிறிஸ்துவ மதம்கிறிஸ்தவத்தில், விருந்தோம்பல் என்பது ஒரு நல்லொழுக்கம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது அந்நியர்களுக்கு அனுதாபத்தை நினைவூட்டுவதும், பார்வையாளர்களை வரவேற்கும் ஒரு விதியாகும்.[13] இது பழைய ஏற்பாட்டில் காணப்படும் ஒரு நல்லொழுக்கமுமாகும். எடுத்துக்காட்டாக, விருந்தினரின் கால் கழுவுதல் அல்லது அவர்களுக்கு முத்தமளிப்பது போன்ற செயல்கள்.[14] அந்நியரை வரவேற்றவர்கள் தன்னையே வரவேற்றதாக புதிய ஏற்பாட்டில் இயேசு கூறுகிறார்.[15] அந்நியர் என்பதில் சகோதரர் மற்றும் அண்டை வீட்டுக்காரர்களும் விருந்தோம்பலுடன் நடத்தப்பட வேண்டும் எனற காரணத்தால் அவர் விரிவுபடுத்தினார்.[16][17] இசுலாம்இசுலாம் நடைமுறையில், அஸ்ஸலாமு அலைக்கும் என்ற சொற்றொடரின் மூலம் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தப்படுகிறது. இந்த நடைமுறை முகம்மது நபியின் போதனைகளில் வேரூன்றியுள்ளது. இந்த போதனைகள் விருந்தினர்கள் மற்றும் போர்க் கைதிகளைக் கூட நடத்துவதுப் பற்றிக் கூறுகிறது. உண்மையான ஆதாரங்களும் திருக்குர்ஆன் வசனங்களும் இந்த மக்கள் மீது இரக்கத்தையும் அமைதியையும் காட்டுவதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இசுலாத்தில் வணிகத்திலும் கூட நல்ல விருந்தோம்பல் என்பது முக்கியமானது[18] செல்டிக் கலாச்சாரங்கள்செல்டிக் சமூகங்களும் விருந்தோம்பலை, குறிப்பாக பாதுகாப்பின் அடிப்படையில் மதிக்கின்றன. ஒரு நபரின் புகலிடக் கோரிக்கையை வழங்கிய ஒரு புரவலன் விருந்தினர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் பராமரிப்பின் கீழ் அவர்கள் தீங்கு விளைவிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தவும் எதிர்பார்க்கப்பட்டனர்.[19] வட ஐரோப்பிய கலாச்சாரங்கள்சுவீடன், நோர்வே, பின்லாந்து, டென்மார்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில், மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு உணவளிப்பது என்பது பொருத்தமற்றதாக கருதப்படுகிறது. அவ்வாறு வரும் குழந்தைகளை உணவின் போது வெளியே செல்லவோ அல்லது மற்றொரு அறையில் காத்திருக்கவோ கூறுவார்கள் அல்லது அக்குழந்தைகளின் பெற்றோரை அழைத்து அனுமதி கேட்பார்கள்.[20] தற்போதைய பயன்பாடு![]() இன்று மேற்கத்திய நாடுகளில் விருந்தோம்பல் என்பது அரிதாகவே பாதுகாப்பு மற்றும் உயிர்வாழ்வுக்கான விஷயமாக உள்ளது. மேலும் இது ஆசாரம் மற்றும் பொழுதுபோக்கு தொடர்புடையது. இருப்பினும், இது ஒருவரின் விருந்தினர்களுக்கு மரியாதை காட்டுவது, அவர்களின் தேவைகளை வழங்குவது மற்றும் அவர்களை சமமாக நடத்துவது ஆகியவற்றை உள்ளடக்கியது. தனிப்பட்ட நண்பர்கள் அல்லது ஒருவரின் குழுவின் உறுப்பினர்களுக்கு மாறாக, அந்நியர்களுக்கு ஒருவர் விருந்தோம்பல் காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும் அளவிற்கு கலாச்சாரங்கள் மற்றும் துணை கலாச்சாரங்கள் வேறுபடுகின்றன. மானுடவியல்மானுடவியலில், விருந்தோம்பல் என்பது விருந்தினர்களுக்கும் விருந்தினருக்கும் இடையிலான சமமற்ற உறவாக பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இது பல்வேறு வகையான பரிமாற்றங்கள் மூலம் விவரிக்கப்படுகிறது.[21] மேற்கோள்கள்
மேலும் படிக்க
|
Portal di Ensiklopedia Dunia