வி. எஸ். நரசிம்மன் (இசையமைப்பாளர்)
வி. எஸ். நரசிம்மன் (V. S. Narasimman) என்பவர் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளராவார். இவர் 1984 இல் அச்சமில்லை அச்சமில்லை திரைப்படத்தில் அறிமுகமானார்.[1][2] இசைப்பயணம்நரசிம்மனின் தந்தை கோட்டுவாத்தியம் சீனிவாச ஐயங்கார் ஆவார். இவரின் நான்கு வயதிலிருந்து தனது தந்தையின் கச்சேரிகளில் பங்கெடுத்து இசை பயின்றார். 1958 ஆம் ஆண்டிலிருந்து திரையிசையில் பிரபலமாக இருந்த இசையமைப்பாளர்கள் அனைவருக்கும் வயலின் வாசித்தார். இதில் ஜி. இராமநாதன் இசையமைப்பில் மட்டும் பங்கெடுக்கவில்லை. ஜி. கே. வெங்கடேசின் இசைக்குழுவில் இளையராஜா உதவியாளராகப் பங்காற்றிய போதிருந்து இவருக்கு இளையராஜாவின் அறிமுகம் கிடைத்தது. அன்னக்கிளி திரைப்படத்திலிருந்து இளையராஜாவின் இசைக்குழுவில் வயலின் வாசிக்கும் கலைஞராகப் பணியாற்றினார். சிம்பொனி உட்பட பல்வேறு இசைத்தொகுப்பில் இளையராஜாவிற்கு வயலின் வாசித்தார். 1984-இல் கே. பாலசந்தர் இயக்கிய அச்சமில்லை அச்சமில்லை திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.[3][4] திரைப்படப் பட்டியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia