15,000 இறப்புகள் (ரோகண விஜயவீரவின் படி) <12,000 கொல்லப்பட்டனர் (அரச மதிப்பீடு)[2] 5,700 சரண்[3] பல கைதுகள், இலங்கை-இந்தியக் கடற்படையால் கைப்பற்றப்பட்ட பல வட கொரிய விநியோகக் கப்பல்கள்[4] பல தலைவர்கள் கைது[a]
12,000 இறப்புகள் (அரசுத் தகவல்) 15,000 - 20,000+ இறப்புகள் (நடுநிலை மதிப்பீடுகள்)[5] 50,000 இற்கும் அதிகமான இறப்புகள் (ஆர்வலர் மதிப்பீடுகள்)[2] இரண்டாம் கட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் இறப்பு.[6]
1971 மக்கள் விடுதலை முன்னணி கிளர்ச்சி (1971 Janatha Vimukthi Peramuna insurrection) அல்லது 1971 கிளர்ச்சி (1971 Revolt) என்பது அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் கீழிருந்த இலங்கையின் ஐக்கிய முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக கம்யூனிச மக்கள் விடுதலை முன்னணி (மவிமு) நடத்திய தோல்வியுற்ற ஆயுதக் கிளர்ச்சி ஆகும். இந்தக் கிளர்ச்சி 1971 ஏப்ரல் 5 தொடங்கி 1971 சூன் வரை நீடித்தது. படையினரையும் ஆயுதங்களையும் அனுப்பிய நட்பு நாடுகளின் வலுவான ஆதரவுடன் இலங்கைப் படைத்துறையால் பிராந்தியங்கள் மீண்டும் கைப்பற்றப்படும் வரை, கிளர்ச்சியாளர்கள் பல வாரங்கள் தென், சப்ரகமுவா மாகாணங்களின் நகரங்களையும் கிராமப்புறங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.[7] அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான இந்த முதல் முயற்சி ஆயுதப் பலத்தால் விரைவாக நசுக்கப்பட்டாலும், 1987 ஆம் ஆண்டில் மக்கள் விடுதலை முன்னணி தீவின் தெற்கு, மத்திய, மேற்கு மாகாணங்களில் குறைந்த தீவிரம் கொண்ட கிளர்ச்சியைத் தொடங்கியது, ஆனால் அது பல மாதங்களுக்கு நீடித்தது.
கிளர்ச்சி முறையாக 1971 இல் தொடங்கியது, ஆனால் முதல் தாக்குதல்கள் 1970 இல் நடந்தன. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, சோசலிச ஆதரவு ஐக்கிய முன்னணி அரசாங்கத்திற்கு எதிராகத் தீவு முழுவதும் போர்க்குணமிக்க எதிர்ப்பைத் தொடங்குவதற்கு முன்பு, மக்கள் விடுதலை முன்னணி வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியை எதிர்த்துப் போராடியது. சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கத்தின் சோசலிசப் பின்னணி பல நாடுகளின் கவனத்தை ஈர்த்தது, அவை அதை ஆதரிக்க முன்வந்தன. சோவியத் ஒன்றியம் 60 வான்படை வீரர்களை அனுப்பியது;[8]இந்தியாவட கொரியக் கப்பல்களையும் துறைமுகங்களைத் தாக்கிய ஒரு சீன சரக்குக் கப்பலையும் நிறுத்தி, கோட்டைகளைப் பாதுகாத்தது, சீனா இராசதந்திர உதவிகளை வழங்கிய போதிலும், அது கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது; சீனத் தூதரக அதிகாரிகள் வட கொரியாவைத் தொடர்பு கொண்டதாகக் கூறப்படுகிறது. வடகொரியா கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் வழங்கியது.
↑"Ceylon/Sri Lanka (1948–Present)". University of Central Arkansas Department of Political Science. University of Central Arkansas. Retrieved 3 May 2024.
↑Halliday, Fred (September–October 1971). "The Ceylonese Insurrection". New Left Review. Retrieved 14 February 2018.
↑Iqbal 1972, ப. 7: "In the past because of இலங்கை's pro-West regimes, its relations to the Soviet Union had not been very close, but the victory of the left had raised Russian hopes."}}