2017 கோவா சட்டப் பேரவைத் தேர்தல் கோவா சட்டமன்றத்திற்கான 40 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 4 பிப்ரவரி 2017 அன்று நடந்த தேர்தலைக் குறிக்கும். வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை அனைத்து 40 தொதிகளிலும் பொருத்தப்பட்டது. இந்தியாவில் முழு மாநிலத்திற்கும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை பயன்படுத்தப்படுவது இதுவே முதன் முறையாகும்.[1][2][3]
4 பிப்ரவரி 2017 - வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெறும்.[7]
கூட்டணிகள்
பாசக
37 தொகுதிகளில் போட்டியிட்டது. மீதமுள்ள கிறுத்துவர்கள் பலமாக உள்ள 3 தொகுதிகளில் மற்ற வேட்பாளர்களை ஆதரிக்கும் என்று மாநில பாசக தலைவர் வினய் தெண்டுல்கர் தெரிவித்தார்.[8]
21 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பாசக அறிவித்தது.[9] வாசுகோ தொகுதி வேட்பாளர் தேர்வில் அதிருப்தி கொண்டு பாசகவின் தெற்கு கோவா மாவட்ட துணைத் தலைவர் கிருட்டிண சல்கார் கட்சியிலிருந்து விலகினார்.[10]
மகாராட்டிரவாதி கோமந்த கட்சி
2012 தேர்தலுக்கு முன்பிருந்தே தாங்கள் பாசகவுடன் கூட்டணி வைத்திருந்ததாகவும், அது தற்போது முறிந்து விட்டது என்றும் சனவரி 5, 2017 அன்று இக் கட்சியின் தலைவர் கூறினார்.[11] 22 தொகுதிகளில் மகோக போட்டியிடும் என்று கூறினார்[12]
ஆம் ஆத்மி கட்சி
ஆம் ஆத்மி முதலமைச்சர் வேட்பாளராக எல்விசு கோம்சை அறிவித்தது.[13][14]
வாக்குப்பதிவு
83% வாக்குப்பதிவு நடந்தது. தவறான நடத்தை விதிகள் பின்பற்றபட்டதன் காரணமாக மர்மகோவா தொகுதிக்கு மறுதேர்தல் நடத்த பரிந்துரைக்கப்பட்டது.[15]
ஆளுநர் பாசகவை ஆட்சியமைக்க அழைத்து 15 நாட்களுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார்.[16] நம்பிக்கை வாக்கெடுப்பில் மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாசக அரசு வென்றுள்ளது.[17]