2017 நடு மெக்சிக்கோ நிலநடுக்கம்
2017 நடு மெக்சிக்கோ நிலநடுக்கம் (2017 Central Mexico earthquake) 2017 செப்டம்பர் 19 அன்று பிற்பகல் 13:14 நநேவ (18:14 ஒசநே) 7.1 MW அளவுடன் மெக்சிக்கோவின் புவெப்லா நகரில் இருந்து 55 கி.மீ. தெற்கே தாக்கியது. ஏறத்தாழ 20 செக்கன்களுக்கு மிகப்பலமான அதிர்வுகள் உணரப்பட்டன. இந்நிலநடுக்கத்தால் மெக்சிக்கோவின் புவெப்லா, மொரேலொசு ஆகிய மாநிலங்களும், மெக்சிக்கோ நகரமும் பாதிப்புக்குள்ளாயின. நாற்பதிற்கும் அதிகமான கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்தன.[1][2][3] மெக்சிக்கோ நிலநடுக்க எச்சரிப்பு மையம் மெக்சிக்கோ நகரில் 20 செக்கன்கள் எச்சரிக்கையை அறிவித்தது. குறைந்தது 230 பேர் உயிரிழந்ததாக இரண்டாம் நாள் செய்திகள் தெரிவித்தன.[4] 800 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.[5] இந்நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 2 மணித்தியாலங்களுக்கு முன்னர், மெக்சிக்கோவில் 1985 ஆம் ஆண்டு நிலநடுக்க அழிவுகள் நினைவுகூரப்பட்டது. 1985 ஆம் ஆண்டில் இதே நாளன்று மெக்சிக்கோவைத் தாக்கிய நிலநடுக்கம் 10,000 இற்கும் அதிகமானோரைக் கொன்றது.[6][7] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia