2019 ஆசியத் தடகளப் போட்டிகள்
2019 ஆசியத் தடகளப் போட்டிகள் (2019 Asian Athletics Championships) என்பது 23 ஆவது முறையாக நடைபெறுகின்ற ஆசிய தடகள போட்டிகளைக் குறிக்கின்றது. இப்போட்டிகள் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 24 வரை கத்தார், தோகா நகரில் நடைபெற்றன. இப்போட்டியில் 18 ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,400 வீரர்கள் பங்கேற்றனர். இருபத்து மூன்றாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 21 வகையான விளையாட்டுகள் போட்டிக்காக இடம்பெற்றன. முன்னதாக 22 ஆவது ஆசிய தடகள போட்டிகள் இந்தியாவின் புவனேசுவரம் நகரில் நடந்து முடிந்தன. நடைபெற்ற நிறைவு விழாவில் ஆசிய தடகள சங்கத்தின் தலைவர் தாலன் அல் அகமது இவ்வமைப்பின் கொடியை அதிகாரப்பூர்வமாக கத்தார் ஒலிம்பிக் குழுவின் பொதுச் செயலாளரும், கத்தார் தடகள கூட்டமைப்பின் தலைவருமான தானி அப்துல்ரகுமான் அல் குவாரியிடம் ஒப்படைத்திருந்தார்[1]. காலிபா அனைத்துலக விளையாட்டு அரங்கத்தில் 23 ஆவது ஆசிய தடகளப் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மேலும் இதே அரங்கில் 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக தடகள சாம்பியன் போட்டிக்கு ஒரு முன்னோட்டமாகவும் இப்போட்டிகள் கருதப்பட்டன[2][3]. பங்குபெற்ற நாடுகள்விளையாட்டுக்கள்அதிகாரபூர்வமாக 21 விளையாட்டுக்கள் இடம்பெற்றன. அவை:
மொத்தப் பதக்கங்கள்
நாடுகள் பெற்ற பதக்கங்கள்* நடத்தும் நாடு (கத்தார்)
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia