2022 இந்திய தேசிய விளையாட்டுப் போட்டிகள்
2022 இந்திய தேசிய விளையாட்டுப் போட்டிகள் (2022 National Games of India) இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் தேசிய விளையாட்டுப் போட்டிகளின் 36 ஆவது பதிப்பாகும். குசராத்து மாநிலத்தில் உள்ள அகமதாபாத்து, காந்திநகர், சூரத்து, வடோதரா, ராச்கோட்டு மற்றும் பவநகர் ஆகிய இடங்களில் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 10 ஆம் தேதிகளுக்கு இடையில் நடைபெறுகிறது.[1][2] குசராத்து 2022 என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. பங்கேற்கும் அணிகள்இந்தியாவின் அனைத்து 28 மாநிலங்கள் மற்றும் எட்டு ஒன்றியப் பிரதேசங்களில் இருந்தும் இந்திய ஆயுதப் படைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியிலிருந்தும் அணிகள் இப்போட்டிகளுக்கு எதிர்பார்க்கப்படுகின்றன. புதிய ஒன்றியப் பிரதேசங்களான லடாக், தாத்ரா நகர் அவேலி மற்றும் தியூ தாமன் ஆகியவையும் இந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 2020 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி, போடோலாந்து பிராந்தியப் பகுதிக்கு தேசிய அளவிலான விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்க உரிமை வழங்கப்பட்டது. எனவே போடோலாந்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியும் இந்த விளையாட்டுகளில் பங்கேற்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
போட்டிகள் நடைபெறும் இடங்கள்
விளையாட்டுகள்தடகளப் போட்டிகள், வளைதடிப் பந்தாட்டம், கால்பந்தாட்டம், கைப்பந்தாட்டம், தென்னிசு, மேசைப்பந்தாட்டம், யுடோ, மற்றும் சடுகுடு, கோ-கோ, மல்லர் கம்பம், யோகாசனம் போன்ற விளையாட்டுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia