2 திமொத்தேயு (நூல்)![]()
ஆசிரியர்திமொத்தேயுவுக்கு எழுதப்பட்ட இரண்டு திருமுகங்களும், தீத்துவுக்கு எழுதப்பட்ட திருமுகமும் ஆயர் பணித் திருமுகங்கள் என வழங்கப்பெறுகின்றன. ஆயர்களான திமொத்தேயுவுக்கும் தீத்துவுக்கும் ஆயர் பணி பற்றி எழுதப்பட்டுள்ளதால் இவை இவ்வாறு பெயர் பெறுகின்றன. இவற்றைப் பவுலே நேரடியாக [2] எழுதினாரா என்பது பற்றி ஐயப்பாடு உள்ளது. இத்திருமுகங்களில் காணப்படும் சொற்கள், மொழி நடை, திருச்சபை அமைப்புமுறை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது, இவற்றைப் பவுலே எழுதியிருப்பார் எனக் கூறுவது கடினமாய் இருக்கிறது. பவுலின் சிந்தனையில் வளர்ந்த அவருடைய சீடர்கள் திருமுகம் எழுதப்பட்ட காலகட்டத்தில் அவர் என்ன கூறியிருப்பார் என்பதை உணர்ந்து, அவர் பெயரால் இத்திருமுகங்களை எழுதியிருப்பார்கள் எனக் கருத இடமிருக்கிறது. இவ்வாறு எழுதுவது அக்காலத்தில் முறையானதாகக் கருதப்பட்டது. முதல் நூற்றாண்டின் இறுதியிலோ இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலோ இவை எழுதப்பட்டிருக்கலாம். 2 திமொத்தேயு என்னும் மடலை பவுல்தாமே எழுதினார் என்று தொடக்ககாலக் கிறித்தவ அறிஞர்கள் குறித்துள்ளனர். தற்கால அறிஞர் சிலரின் கருத்துப்படி, 2 திமொத்தேயு பவுலின் படைப்பு என்றும், அப்பாணியைப் பின்பற்றி, பவுலின் இறப்புக்குப் பின் அவரது சீடர் 1 திமொத்தேயு, மற்றும் தீத்து ஆகிய திருமுகங்களைப் பவுலின் சிந்தனைக்கு ஏற்ப எழுதியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கு ஆதாரமாக, 2 திமொத்தேயு மடலுக்கும் பவுல் தம் இறுதிக்காலத்தில் எழுதிய மடல்களுக்கும் இடையே நிலவும் ஒற்றுமை சுட்டிக்காட்டப்படுகிறது. அதே நேரத்தில் 2 திமொத்தேயு மடல் 1 திமொத்தேயுவிலிருந்தும் தீத்து மடலிலிருந்தும் வேறுபட்டிருப்பதும் கருதத்தக்கது. எழுதப்பட்ட சூழலும் நோக்கமும்பவுல் தம் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் மீண்டும் ஒருமுறை சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அப்போது இரண்டாம் முறையாகத் திமொத்தேயுவுக்குத் திருமுகம் எழுதியதாகவும் கூறப்பட்டுள்ளது. முதல் முறை போலல்லாமல் இம்முறை அவர் ஒரு சாதாரண குற்றவாளிபோல் நடத்தப்பட்டார் (காண்க: 2 திமொ 1:16; 2:9; 4:13) என்னும் குறிப்புத் தரப்பட்டுள்ளது. இத்திருமுகத்தில் ஆசிரியர், பவுலின் வாழ்வை எடுத்துக்காட்டாகக் கொண்டு பல அறிவுரைகளைத் திமொத்தேயுவுக்கு வழங்குவதைக் காண்கின்றோம். மடலின் உள்ளடக்கம்இத்திருமுகத்தில் பவுலைக் குறித்த செய்திகள் பல உள்ளன. மன உறுதியுடன் இருத்தலே இத்திருமுகத்தின் மையக் கருத்தாக அமைகிறது. "கடவுள் நமக்குக் கோழையுள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார்" (2 திமொ 1:7) என்று மடலாசிரியர் கூறுகிறார். திமொத்தேயு தொடர்ந்து இயேசுவுக்குச் சான்று பகரவும், நற்செய்தி மற்றும் பழைய ஏற்பாட்டின் உண்மையான போதனைகளை ஏற்றுக்கொள்ளவும், போதகர், நற்செய்தியாளர் என்னும் முறையில் தம் கடமைகளைச் செவ்வனே செய்யவும் திருமுக ஆசிரியர் வலியுறுத்துகிறார்; துன்பங்கள் நடுவிலும் எதிர்ப்புகள் நடுவிலும் முன்மாதிரியாய் வாழ்ந்து காட்டப் பணிக்கிறார். பயனற்ற வீண் விவாதங்களில் திமொத்தேயு ஈடுபடலாகாது என அவர் அறிவுறுத்துகிறார். பவுல் தம் வாழ்வின் இறுதிக்கட்டம் நெருங்கிவருவதை உணர்கின்றார்; கடவுளுக்கு உகந்த விதத்தில் தாம் பணியாற்றியதை நினைவுகூர்கின்றார்: "நான் பிரிந்து செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்து விட்டேன். விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே" (2 திமொ 4:6-8).
சில பகுதிகள்2 திமொத்தேயு 2:8-13 "தாவீதின் மரபில் வந்த இயேசு கிறிஸ்து
2 திமொத்தேயு 4:1-5 "கடவுள் முன்னிலையிலும்
உட்பிரிவுகள்
மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia