ஆரி பாட்டர் (கதாப்பாத்திரம்)
ஆரி ஜேம்சு பாட்டர் (Harry James Potter) என்பது ஜே. கே. ரௌலிங் என்பார் எழுதிய ஆரி பாட்டர் தொடரின் முக்கிய கதாப்பாத்திரம் ஆகும்.[1] ஆரிப் பாட்டர் நூற்றொடரின் பெரும்பாலான பகுதியானது அனாதையான பாட்டரின் வாழ்நாளின் ஏழு வருடங்களை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. தனது பதினோராவது வயதில், தான் ஒரு மந்திரவாதி என அறிந்துகொண்டு மந்திரங்களையும் மந்திரக்கலைகளையும் கற்பிக்கும் ஆக்வாட்சு பாடசாலையில் இணைகிறான். அங்கு அல்பசு டம்பிள்டோர் மற்றும் ஏனைய பேராசிரியர்களின் கீழ் தனது மந்திரக் கல்வியைத் தொடர்கிறான். இந்த நேரத்தில் வால்டமோட் என்னும் தீயசத்திகளின் தலைவன் ஆரி பாட்டரை கொல்ல முயற்சி செய்கிறான். அவனிடம் இருந்து தன்னையும் மந்திர உலகையும் காப்பாற்றிக்கொண்டு, அவனை அழிப்பதே கதையாக தொடர்கிறது. கருத்தும் உருவாக்கமும்ரௌலிங்கின் கூற்றுப்படி, ஆரி பாட்டர் மற்றும் நாவல் தொடருக்கான யோசனை 1990 ஆம் ஆண்டு ரயிலுக்காகக் காத்திருந்தபோது அவருக்கு வந்தது. ஆரியை முதலில் ஒரு "அடர்த்தியான, கருப்பு முடி கொண்ட, கண்ணாடி அணிந்த பையனாக" அவர் உருவாக்க நினைத்தாகக் கூறினார்.[2] மேற்கோள்கள்
மேலும் படிக்க
|
Portal di Ensiklopedia Dunia