இந்திய சட்டமன்றத் தேர்தல்கள் 2013இந்தியாவின் கர்நாடகா, தில்லி, திரிபுரா, இராஜஸ்தான், நாகலாந்து, மிசோரம், மேகாலயா, சத்தீசுகர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய ஒன்பது மாநிலங்கள் அரசுகளின் ஆட்சிகாலம் 2013ம் ஆண்டில் முடிவடைவதால், மேற்படி மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, நடந்து முடிந்தது.[1] திரிபுரா![]() 23,55,446 வாக்காளர்களைக் கொண்ட திரிபுரா மாநிலத்தில் 11வது சட்டமன்ற தேர்தல், 2013ம் ஆண்டு பிப்ரவரி 14ம் நாள் தேர்தல் நடந்தது[2][3]. இத்தேர்தலில், இந்தியாவின் அதிககபட்சமாக 93.57விழுக்காடு வாக்குகள் பதிவானது[4]. தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 28ம் நாள் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதிக தொகுதிகள் வென்று ஆட்சியமைத்தது[5]. தேர்தல் முடிவுகள்
மேகாலயா![]() 1481473 வாக்காளர்களைக் கொண்ட மேகாலயா மாநிலத்தில் 21வது சட்டமன்ற தேர்தல், 2013ம் ஆண்டு பிப்ரவரி 23ம் நாள் தேர்தல் நடந்தது[6]. இத்தேர்தலில், 88விழுக்காடு வாக்குகள் பதிவானது[7]. தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 28ம் நாள் நடைபெற்றது. இதில் இந்திய தேசிய காங்கிரசு, அதிக தொகுதிகள் வென்று ஆட்சியமைத்தது[8]. தேர்தல் முடிவுகள்
நாகாலாந்து![]() 1198449 வாக்காளர்களைக் கொண்ட நாகாலாந்து மாநில சட்டமன்ற தேர்தல், 2013ம் ஆண்டு பிப்ரவரி 23ம் நாள் தேர்தல் நடந்தது[6]. இத்தேர்தலில், 83விழுக்காடு வாக்குகள் பதிவானது[7]. தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 28ம் நாள் நடைபெற்றது. இதில் நாகா மக்கள் முன்னனி, அதிக தொகுதிகள் வென்று ஆட்சியமைத்தது[8]. தேர்தல் முடிவுகள்
கர்நாடகா![]() 224 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட கர்நாடகாவின் 14வது சட்டமன்ற தேர்தல், 2013ம் ஆண்டு மே 5ம் நாள் நடந்தது[9]. இத்தேர்தலில், 66.81விழுக்காடு வாக்குகள் பதிவானது[10]. தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 8ம் நாள் நடைபெற்றது. இதில் இந்திய தேசிய காங்கிரசு, அதிக தொகுதிகள் வென்று ஆட்சியமைத்தது[8]. தேர்தல் முடிவுகள்
தில்லி![]() 1.19கோடி வாக்காளர்களைக் கொண்ட தில்லி சட்டமன்றத்தின் பொதுத் தேர்தல் 2013, திசம்பர் 4ம் நாள் நடந்தது[11]. இத்தேர்தலில், 74விழுக்காடு வாக்குகள் பதிவானது[12]. 2013 திசம்பர் 8ம் நாள், வாக்கு எண்ணிக்கையின் முடிவில், பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியும் ஆட்சியமைக்கும் விருப்பம் இல்லாமையால், 30விழுக்காடு வாக்குகள் பெற்று தேர்தலின் இரண்டாம் நிலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, இந்திய தேசிய காங்கிரசின் ஆதரவோடு ஆட்சியமைத்தது. தேர்தல் முடிவுகள்
ராஜஸ்தான்![]() 4கோடி வாக்காளர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல் 2013, திசம்பர் 1ம் நாள் நடந்தது[13]. இத்தேர்தலில், 74விழுக்காடு வாக்குகள் பதிவானது[14]. 2013 திசம்பர் 8ம் நாள், வாக்கு எண்ணிக்கையின் முடிவில், பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சியமைத்தது. தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia