இரியா மசூம்தார் சிங்கால்
இரியா மசூம்தார் சிங்கால் (பிறப்பு 1982) ஒரு முறை பயன்படுத்தும் மக்கும் தன்மை கொண்ட பொருட்களை உருவாக்கும் ஓர் இந்தியத் தொழில் முனைவோர் ஆவார். இவர் நாரி சக்தி புரஸ்கார் விருது பெற்றுள்ளார். வாழ்க்கைஇரியா 1982 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். பிரிஸ்டல் பல்கலைக்கழகம், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம், போன்ற பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்றார். இலண்டன், துபாயில் சிறுது காலம் தங்கியிருந்த இவர், பின்னர் 2009 இல் இந்தியா திரும்பி பைசர் மருந்து நிறுவனத்தின் இலண்டன் அலுவலகத்தில் விற்பனையாளராகப் பணிபுரிந்தார். மறுசுழற்சி செய்யாது நெகிழிகள் அப்புறப்படுத்தப்படுவதைக் கண்டு வியந்த இரியா மே 2009 இல், இந்தியாவில் மக்கும் பொருட்களை உருவாக்க $1 மில்லியன் முதலீட்டுடன் ஈகோவேர் சொயூஷன்ஸ் என்ற ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். [1] ![]() இரியா, 20 ஊழியர்களைத் தனது நிறுவனத்தில் பணிக்கு சேர்த்துக் கொண்டு தனது தயாரிப்புகளை சந்தைப்படுத்த முயன்றார். ஆனால் இவருக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.[1] இவரது தயாரிப்புகள் 90 நாட்களில் மண்ணில் மக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. [2] இவரது நிறுவனம் சமையல் கருவி, தட்டுகள் போன்ற ஒருமுறை பயன்படுத்தும் பொருட்களை உருவாக்குகிறது. அவை தானியத் தொழிலில் இருந்து வெளியேறும் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இந்திய ரயில்வே இவரது முக்கியமான வாடிக்கையாளர்களில் ஒன்றாகும்.[3] 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் "நிலையான உணவுப் பொட்டலம் தயாரிக்கும் துறையில் முன்னோடியாக இருந்ததற்காக" இவருக்கு நாரி சக்தி விருது வழங்கப்பட்டது.[4] இந்த விருதை இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் புது தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் இல்லத்தில் வழங்கினார்.[5] விருதுகள் மற்றும் கௌரவங்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia