ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை
ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை (ICC World Test Championship), அல்லது தேர்வுத் துடுப்பாட்ட உலகக்கிண்ணம் (Test World Cup), என்பது பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (ஐசிசி) இனால் நடத்தப்படும் தேர்வுத் துடுப்பாட்டத்திற்கான குழு-நிலைப் போட்டித் தொடர் ஆகும். இது 2019 ஆகத்து 1 இல் தொடங்கப்பட்டது.[1][2][3] முதலில் இந்தத் தொடரை 2013 வாகையாளர் கோப்பைக்குப் பதிலாக 2009 இல் நடத்த ஐசிசி திட்டமிட்டிருந்தது. ஆனால் அந்த முயற்சி கைவிடப்பட்டு, 2017 சூனில் இந்தத் தொடரை நடத்தத் திட்டமிடப்பட்டது. தற்போது இதன் முதல் தொடர் ஆகஸ்ட் 2019 முதல் சூன் 2021 வரை நடத்தப்படும் என்று ஐசிசி அறிவித்தது. 9 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் முடிவுக்கு ஏற்றவாறு புள்ளிகள் வழங்கப்படும். இறுதியாக புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும்.[4][5] அக்டோபர் 2017 இல், தேர்வுத் துடுப்பாட்டக் குழு ஒன்று அதன் உறுப்பினர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டதாக ஐசிசி அறிவித்தது, இதில் இரண்டு ஆண்டுகளில் முதல் ஒன்பது அணிகள் தொடரில் விளையாடும், முதல் இரண்டு இடங்களைக் கைப்பற்றும் அணிகள் உலக தேர்வுத் துடுப்பாட்ட லீக் வாகை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இது ஒரு ஒரு ஐசிசி நிகழ்வாக நடைபெறும்.[6] முதல்நிலை ஆட்டங்கள் ஐசிசி நிகழ்வாகக் கருதப்படவில்லை, அத்துடன் ஒளிபரப்பு உரிமைகள் நடத்தும் நாட்டின் துடுப்பாட்ட வாரியத்திடம் இருந்தன. ஆனால் முதல்நிலைப் போட்டிகளைப் போலல்லாமல், இறுதிப் போட்டிகள் ஐசிசி நிகழ்வாக இருந்தன. முதல் ஐசிசி உலகத் துடுப்பாட்ட வாகை முதல்நிலைப் போட்டிகள் 2019 ஆஷசுத் தொடருடன் தொடங்கி, சூன் 2021 இல் இறுதிப் போட்டியில் இந்தியாவைத் தோற்கடித்து நியூசிலாந்து கோப்பையைக் கைப்பற்றியது. இரண்டாவது ஐசிசி உலகத் துடுப்பாட்ட வாகை முதல்நிலைப் போட்டிகள் 2021 ஆகத்து 4 அன்று பட்டோடி பதக்கத் தொடருடன் தொடங்கி,[7] சூன் 2023 இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆத்திரேலியா கோப்பையை வென்றது. வரலாறு
அணிகள் பெற்ற தரவரிசைஅனைத்து தேர்வு-நாடுகளின் செயல்பாடுகளின் கண்ணோட்டம்:
குறிப்பு:
இவற்றையும் காண்கசான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia