2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை (2019-21 ICC World Test Championship) என்பது ஐசிசி நடத்தும் தேர்வுத் துடுப்பாட்ட வாகைத் தொடர் ஆகும். இதன் முதல் பதிப்பு ஆகத்து 2019 தொடங்கி சூன் 2021 வரை நடைபெற்றது.
தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் முதல் பதிப்பான இத்தொடரில் மொத்தம் 9 நாடுகளைச் சேர்ந்த துடுப்பாட்ட அணிகள் பங்குபெறுகின்றன. புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு இடையே இறுதிப்போட்டி இங்கிலாந்திலுள்ள சவுதாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்றது.
போட்டி முறை
2 வருடங்கள் நடைபெறவுள்ள இந்தத் தொடரில், ஒவ்வொரு அணியும் 6 எதிரணிகளுடன் மோதும். அவற்றில் 3 போட்டிகள் அணியின் சொந்த மண்ணிலும், 3 போட்டிகள் எதிரணியின் சொந்த மண்ணிலும் நடைபெறும். ஒவ்வொரு போட்டியும் 5 நாட்கள் நடைபெறும்.
ஒவ்வொரு தொடரிலும் 2 முதல் 5 போட்டிகள் வரை நடைபெறும். எனவே போட்டிகளின் அளவைப் பொறுத்து புள்ளிகள் வழங்கப்படுகின்றன.
ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைத் தொடரில் புள்ளிகள் வழங்கும் முறை
போட்டிகள்
வெற்றி
சமன்
வெ/தோ
தோல்வி
2
60
30
20
0
3
40
20
13
0
4
30
15
10
0
5
24
12
8
0
ஆட்டநேர முடிவில் வீச வேண்டிய நிறைவு விகிதத்திற்குக் குறைவாக பந்துவீசியுள்ள அணிக்கு தண்டனைப் புள்ளிகள் (Penalties) வழங்கப்படும். அதன்படி ஒரு அணியின் ஒவ்வொரு மெதுவான நிறைவு வீச்சிற்கும் 2 புள்ளிகள் வீதம் குறைக்கப்படும்.
அணிகள்
தொடரில் பங்குபெறும் ஐசிசியின் 9 முழுநிலை உறுப்பினர்கள்:
உலகத் துடுப்பாட்ட வாகைத் தொடரில் நடைபெறும் போட்டிகளின் அட்டவணையை 20 சூன் 2018 அன்று ஐசிசி வெளியிட்டது.[1]ஐபிஎல் நடைபெறும் ஏப்ரல்-மே மாதங்களில் இப்போட்டிகள் நடைபெறாத வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.
பின்வரும் அட்டவணையில் ஒவ்வொரு அணியும் மோதவுள்ள மொத்த போட்டிகளும் அவை மோதாத அணிகளின் பட்டியலும் உள்ளது.
↑Australia were deducted 4 points for a slow over rate in the second Test against India on 29 December 2020.[2]
↑West Indies were deducted 6 points for a slow over rate in the second Test against South Africa on 22 June 2021.[3]
முதல் இரு அணிகள் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும்.
ஒருவேளை இரு அணிகளும் சமமான புள்ளிகளைப் பெற்றிருந்தால் அதிக தொடர்களை வென்றுள்ள அணி முன்னிலை பெறும். அதுவும் சமமாக இருக்கும்போது இழப்புக்கு ஓட்டங்கள் விகிதம் (Runs per wicket ratio) அதிகளவு பெற்றுள்ள அணி முன்னிலை பெறும். இழப்புக்கு ஓட்டங்கள் விகிதம் என்பது ஒரு அணி ஒவ்வொரு இழப்பிற்கும் எடுத்த சராசரி ஓட்டங்களை ஒவ்வொரு வீழ்த்தலுக்கும் விட்டுக்கொடுத்த சராசரி ஓட்டங்களால் வகுப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது.[6]
தொடக்கத்தில் இருந்த விதிகளிபடி, அணிகள் முதலில் புள்ளிகள் அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டன. இரண்டு அணிகள் ஒரே புள்ளிகளைப் பெற்றிருந்தால், அதிக தொடர்களைக் கைப்பற்றிய அணி உயர்ந்த இடத்தில் வைக்கப்படும். அப்படியிருந்தும், இரண்டும் சமமாக இருந்தால், இலக்கு ஒன்றுக்கான ஓட்டங்களின் விகிதம் கருத்தில் கொள்ளப்படும்.[7] கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பல தேர்வுத் தொடர்கள் நடத்தப்பட முடியாமையினால், 2020 நவம்பரில் இவ்விதிகள் மாற்றப்பட்டன. இதனால், எல்லா அணிகளும் ஒரே எண்ணிக்கையிலான புள்ளிகளுக்கு போட்டியிடாது.[8]