குஜராத் சட்டமன்றத் தேர்தல், 2012
குஜராத் சட்டமன்றத் தேர்தல், 2012 என்பது இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலை குறிக்கிறது.[2] 13 மற்றும் 17 திசம்பர் 2012ல் இரண்டு கட்டங்களாக இத்தேர்தல் நடைபெற்றது. 20 திசம்பர் 2012ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இத்தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்தியது. குஜராத் சட்டமன்றத்திற்கான 182 உறுப்பினர்களை அம்மாநில மக்கள் தேர்தெடுத்தனர்.[3] அப்போதைய முதலமைச்சராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நரேந்திர மோடி 2001லிருந்து முதலமைச்சராக பதவி வகித்தார்.[4][5] தற்போது குஜராத்தின் முக்கிய எதிர்கட்சியாக காங்கிரசு கட்சி உள்ளது. இரண்டு கட்டங்களாக நடைபெற்ற இத்தேர்தலில் 71.32 சதவீதம் வாக்குகள் பதிவாகின. முதல் கட்டத்தில் 70.75 சதவீதமும், இரண்டாம் கட்டம் 71.85 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.[6] முக்கிய நிகழ்வுகள்
முடிவுகள்திசம்பர் 20, 2012 அன்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் தற்போதைய ஆளும் பாஜக மூன்றாம் முறையாக அருதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. பிஜேபி 115 தொகுதிகளும், காங்கிரஸ் 61 தொகுதிகளும் தேசியவாத காங்கிரஸ் 2, கேசுபாய் பட்டேலின் குஜராத் பரிவர்தன் கட்சிக்கு 3, மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஒரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர்.[7]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia