குலுக்கல்லூர் தொடருந்து நிலையம்
குலுக்கல்லூர் தொடருந்து நிலையம் (Kulukkallur railway station) என்பது கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில், பட்டாம்பிக்கு அருகில் உள்ள குலுக்கல்லூர் என்ற சிற்றூரில் உள்ள ஒரு முக்கிய தொடருந்து நிலையம் ஆகும். இது தென்னக இரயில்வேயின் ஷோரனூர்-மங்களூர் பாதையில் அமைந்துள்ளது. இந்த நிலையத்தில் நிறுத்தப்படும் தொடருந்துகள் இந்த ஊரை நிலம்பூர், ஷொர்ணூர், அங்காடிபுரம் போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் இணைக்கின்றது.[1] ஷோரனூர்-நிலம்பூர் தொடருந்து பாதைநீலம்பூர்-ஷோரனூர் தொடருந்து பாதை என்பது கேரளா மாநிலத்தில், தென்னக இரயில்வே மண்டலத்துக்கு உட்பட்ட ஒரு கிளைப் பாதையாகும். மேலும் இது இந்தியாவின் அகலப் பாதைகளில் ஒன்றாகும்.[2] இது ஷோரனூர் சந்திப்பில் இருந்து (பாலக்காடு மாவட்டம்) நிலம்பூர் தொடருந்து நிலையம் வரை (மலப்புறம் மாவட்டம்) 66 கிலோமீட்டர்கள் (41 மைல்) நீளம் கொண்ட ஒற்றை வழிப் பாதையாகும்.[2] இந்த நிலையம் கோழிக்கோடு–உதகமண்டலம் நெடுஞ்சாலையில் நிலம்பூர் நகரத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது.[2] இந்த வழித்தடத்தில் ஷோரனூர்–நிலம்பூர் சாலை பயணிகள் இரயில்கள் இயக்கப்படுகின்றன.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia