மிக இளம் வயதில் கதிர்வீச்சு வெளிப்பாடு , முன்கழுத்துக் கழலை ஏற்படுதல், மற்றும் மரபு வழி ஆகியன பாதிக்கப்படுவதற்கான காரணிகளாகக் கருதப்படுகின்றன.[4][5] இது நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. சதைக் காம்பு கேடயப் புற்றுநோய், நுண்குமிழ் கேடயப் புற்றுநோய், முகுளப் புற்றுநோய் மற்றும் உத்துருவம் கேடயப் புற்றுநோய் ஆகியனவாகும்.[6] செவியுணரா ஒலி மற்றும் நல் ஊசி உறிஞ்சுதல் மூலம் இவ்வகையான நோய்களைக் கண்டறியலாம்.[4]
கதிரியக்க சிகிச்சை, வேதிச் சிகிச்சை போன்ற முறைகளில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.[7] அறுவை சிகிச்சைகளின் போது நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து பகுதிகளையும் நீக்க வேண்டிய தேவை இருக்கலாம்.[8]அமெரிக்க ஐக்கிய நாட்டில் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட 98 விழுக்காடு மக்கள் 5 ஆண்டுகள் உயிர்வாழும் விகிதத்தில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளனர்.[9]
2015 ஆம் ஆண்டின் நிலவரப்படி 3.2 மில்லியன் மக்கள் கேடயச் சுரப்பி புற்றுநோயினால் பாதிக்கப்பட்டனர். 2012 இல் 2,98,000 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டனர்.[10] இதில் பெரும்பானமையான மக்கள் 35 மற்றும் 65 வயதில் இருந்தனர்.[11] இந்நோயினால் ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டனர்.[11]ஆசிய வழித்தோன்றல்களில் இருந்து வந்த மக்களே பெரும்பான்மையாகப் பாதிக்கப்பட்டனர்.[12] கடந்த சில ஆண்டுகளில் நோயினைக் கண்டறியும் விதங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.[10]2015 இல் இந்த நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 31,900 ஆக கண்டறியப்பட்டுள்ளது.